Thursday, October 18, 2012

33 த‌ங்க‌ ப‌த‌க்க‌ங்க‌ள் வென்று கீழக்கரை தாசிம் பீவி கல்லூரி மாணவிகள் சாதனை


மாநிலங்களுக்கிடையே நடந்த யோகாசன போட்டியில் கீழக்கரை தாசிம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரி மாணவிகள் ஏர‌ள‌மான‌ த‌ங்க‌ ப‌த‌க்க‌ங்க‌ள் பதக்கம் பெற்றனர்.

மாநிலங்களுக்கு இடையே திருப்பூரில் யோகாசன போட்டி நடந்தது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர். இதில் யோகா ஆசிரியர் பத்மநாபனிடம் பயிற்சி பெற்ற கீழக்கரை தாசிம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியை சேர்ந்த 15 மாணவிகள் பங்கேற்றனர்.

இவர்கள் 33 பதக்கங்களையும், 17 கோப்பைகளையும் பெற்று சாதனை படைத்தனர்.ஒரு மாண‌வி த‌னி ந‌ப‌ர் சாம்பிய‌னாக‌ தேர்வு செய்ய‌ப்ப‌ட்டார்.

வெற்றி பெற்ற மாணவிகளை கலெக்டர் நந்தகுமார், கல்லூரி செயலாளர் புகாரி, தாளாளர் ரஹ்மத்நிஷா, முதல்வர் சுமையா யோகா பயிற்சியாளர் பத்மநாபன் ஆகியோர் பாராட்டினர்.


 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.