Monday, October 22, 2012

புதிய‌ வாக்க‌ள‌ர் சேர்க்கை முகாம்!வெளிநாட்டில் ப‌ணிபுரிவ‌ர்க‌ளை சேர்ப்ப‌து எப்ப‌டி !அதிகாரி விள‌க்க‌ம்!

கீழக்கரையில் புதிய வாக்காளர் சேர்க்கை, பெயர் திருத்தம், பெயர் நீக்கம் ஆகியவற்றிற்கு சிறப்பு முகாம் நடந்து வருகிறது. இதை மாவட்ட வருவாய் அலுவலர் விஸ்வநாதன் ஆய்வு செய்தார்.

இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலர் கூறுகையில், ‘கீழக்கரை உள்வட்டாரத்தில் 26 சென்டர் அமைக்கப்பட்டு சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. என்றார்

வாக்க‌ள‌ர் ப‌ட்டிய‌லில் விடுப‌ட்டுள்ள‌ வெளிநாட்டில் ப‌ணி ப‌ரிபுவ‌ர்க‌ளை எப்ப‌டி வாக்க‌ள‌ர் ப‌ட்டிய‌லில் சேர்ப்ப‌து என்று ம‌க்க‌ள் சேவை இய‌க்க‌த்தின் முஜீப் அதிகாரிக‌ளிட‌ம் கேள்வி எழுப்பிய‌ போது,

மாவட்ட வருவாய் அலுவலர் விஸ்வநாதன் ப‌தில‌ளித்த‌ போது,

 வெளிநாட்டில் பணிபுரிபவர்கள் வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்தபிறகு எண்: 6ஏ படிவத்தை பூர்த்தி செய்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அல்லது கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்தால் வாக்காளர் புத்தகத்தின் கடைசி பகுதியில் போட்டோ மற்றும் பெயர் சேர்க்கப்படும். இதற்கு வாக்காளர் அடையாள அட்டை தரப்பட மாட்டாது. தேர்தல் நேரத்தில் அவர்கள் ஊருக்கு வந்தால் தனது பாஸ்போர்ட்டை காட்டி வாக்களிக்கலாம்’ என்றார்.

 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.