Sunday, October 28, 2012

கீழ‌க்க‌ரையில் வாலிப‌ருக்கு க‌த்தி குத்து!


கீழ‌க்க‌ரையில் வாலிப‌ர் ஒருவ‌ர் க‌த்தியால் குத்தப்ப‌ட்டு காய‌ம‌டைந்தார். இது குறித்து போலீஸ் த‌ர‌ப்பில் கூற‌ப்ப‌டுவ‌தாவ‌து,

கீழக்கரை புது கிழக்குத் தெருவைச் சேர்ந்த ஜாகிர்ஹூசைன் மகன் சதாம்ஹூசைன்(24). இவரது நண்பர் சல்மான். இருவரும் நேற்று ஹஜ்பெருநாள் சிறப்பு தொழுகை தொழுது விட்டு முகமது காசிம் அப்பா தர்ஹா அருகில் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது இன்னொரு நண்பர் அப்தாஹிர் அங்கு வந்தார். அங்கு வ‌ந்த‌ அப்தாகிருக்கும், சதாம்ஹூசைனுக்கும், இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. வாய்த்தகராறு முற்றி சண்டையாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த அப்தாகிர்,   கத்தியை எடுத்து சதாம்ஹூசைனை குத்தினார். இதில் சதாம்ஹூசைனுக்கு இடது தோள் பட்டையிலும் இடது இடுப்புபகுதியிலும் காயம் ஏற்பட்டது.

பலத்த காயம் அடைந்த சதாம்ஹூசைன் கீழக்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவிக்குப்பின் மேல்சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கீழக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.