Saturday, October 20, 2012

கீழக்கரையில் அதிமுக 41வது ஆண்டு துவக்க விழா

கீழக்கரையில் அ.தி.மு.க. கட்சியின் 41வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மாணவர் அணி சார்பில் பள்ளிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உண‌வு பொருள்க‌ள் ம‌ற்றும் இனிப்பு வழங்கினர்.
 
கீழக்கரை நகராட்சி தலைவர் ராவியத்துல்கதரியா தலைமையில் அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கும் உண‌வு பொருள்க‌ள், பள்ளி மாணவர்களுக்கும் இனிப்பும் வழங்கப்பட்டது.
 
 நிகழ்ச்சியில் அ.தி.மு.க. மாணவரணி செயலாளர் சுரேஷ், நகராட்சி துணைத்தலைவர் ஹாஜாமுகைதீன், நகர் முன்னாள் செயளாளர்கள் இம்பாலா ஹூசைன், நாகரத்தினம், சிறுபான்மை பிரிவு செயலாளர் யாசின், ஒன்றிய துணைச் செயலாளர் செல்வக்குமார், கவுன்சிலர்கள் பாவா செய்யது கருணை, ரபியுதீன், மீனாள் மற்றும் வார்டு செயலாளர்கள் லியாகத், நிசார்அகமது, ராமசாமி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.