Friday, October 5, 2012

ராம‌நாதபுர‌ம் மாவ‌ட்ட‌த்தில் அக்.10 புத‌ன் அர‌சுஅலுவ‌லங்க‌ளுக்கு உள்ளுர் விடுமுறை !

மாவ‌ட்ட‌ க‌லெக்ட‌ர‌ ந‌ந்த‌குமார்
ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு விழாவையொட்டி அக்.10ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு அலுவலகங்களுக்கு உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கலெக்டர் நந்தகுமார் அறிக்கை:

 ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட டம் ஏர்வாடி கிராமத்தில் உள்ள மஹான் குத்புல் அக் தாப் சுல்த்தான் செய்யது இபுராஹிம் ஷஹீது ஒலியுல் லாக் ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு திருவிழா வரும் அக்.10ம் புதன்கிழமை நடைபெறுகிறது.

அன்றைய தினம் ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு அலுவலகங்களுக்கு ஒருநாள் உள்ளுர் விடுமுறை அளிக்கப்படுகிறது.

கருவூலம், சார்நிலை கருவூலம், மற்றும் அனை த்து அலுவலகங்களும் அரசு பாதுகாப்பிற்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்கள் செயல்படுவார்கள்.

வரும் அக்.20ம் தேதி சனிக்கிழமை பணிநாளாக அரசு அலுவலகங்கள் செயல்படும் என அவர் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.