Tuesday, September 20, 2011

வடக்குத்தெரு 19வது வார்டு கவுன்சிலர் வேட்பாளராக செய்யது இப்ராகிம் போட்டி!



கீழக்கரை நகராட்சி தலைவர் பதவி மகளிருக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுவதற்கு பலரும் ஏற்பாடுகளை செய்து வரும் நிலையில் கீழக்கரை 19வது வார்டு வடக்குத்தெரு பகுதியில் மறைந்த கே.எஸ்.எம்.எஸ்.அஹமது அபுதாகிர் அவர்களின் மகன் செய்யது இப்ராகிம்(39) என்ற இளைஞர் கவுன்சிலர் வேட்பாளராக போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இவர் நாஸா சமுக நல அமைப்பில் செயலாளராக பணியாற்றி பல் வேறு நலப்பணிகளை ஆற்றியுள்ளார். பொது சேவையில் ஆர்வமுள்ள இவர் கீழக்கரையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

இது குறித்து அவர் கூறியதாவது , உள்ளூரிலேயே தொழில் செய்து வருவதால் கவுன்சிலராக மக்களுக்கு பணியாற்றுவதில் எனக்கு சிரமமிருக்காது மேலும் இப்பகுதியில் பிறந்து வளர்ந்தவன் இப்பகுதி மக்களுக்கு நான் நன்கு அறிமுகமானவன் இப்பகுதியில் உள்ள சுகாதார பிரச்சினை உள்பட இப்பகுதி மக்களின் அன்றாட பிரச்சினைகளை நன்கு அறிந்தவன் அவற்றை தீர்க்க நிச்சயம் முயற்சி செய்வேன் . இறைவன் உதவியால் இப்பகுதி மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் வெற்றி பெறுவேன் என்றார்.

குறிப்பு : கீழக்கரை நகராட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோர் தங்கள் புகைபடங்களுடன் முழு தகவலையும் அனுப்பி வைத்தால் செய்தியாக வெளியிட தயாராக‌ உள்ளோம் keelakraitimes@yahoo.com

7 comments:

  1. enga vottu ungalalukkuthan, advance valthukkukkal

    ReplyDelete
  2. namakuthan vetriiiiiii
    inshallaah kakak

    ReplyDelete
  3. Vetri ungalaku than aanal intha pathaviyaium plot potturathiya....

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.