Tuesday, January 17, 2012

குப்பைகள் அகற்றும் பணியில் தொய்வு!



சொக்கநாதர் கோயில் எதிரில் இஸ்லாமிய பள்ளி மைதானம் அருகே குவிந்துள்ள குப்பைகள்
கீழ‌க்க‌ரையில் சிலநாட்களாக பல இட‌ங்க‌ளில் குப்பைக‌ள் அக‌ற்ற‌ப்ப‌டாம‌ல் உள்ள‌து.இத‌னால் ப‌ல‌ இட‌ங்க‌ளில் குப்பைக‌ள் நிறைந்து காண‌ப்படுகிறது என்று பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர்.

இது குறித்து சேகு சதக் இப்ராகிம் கூறுகையில் ,
பல முக்கிய இடங்களில் குப்பைகள் நிறைந்து ஆடு மாடு உலாவும் இடமாக மாறி வருகிறது.கடந்த 5 நாட்களாக குப்பைகள் அகற்றப்படவில்லை எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் என்றார்.

இது குறித்து நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா கூறியதாவது,

பொங்கல் விடுமுறையையோட்டி குப்பைகளை அகற்றும் பணிகளை முழுமையாக நடைமுறைபடுத்த முடியவில்லை ஆனாலும் முழுமையாக இல்லாவிட்டாலும் பல இடஙளில் காலை நேரத்தில் குப்பை அகற்றும் பணி நடைபெற்றது.நாளை முதல் அனைத்து இடங்களிலும் குப்பைகளை அகற்றும் பணிகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு சுத்தமாக்கப்படும் என்றார்

1 comment:

  1. attn:chairman of kilakarai

    RIGHT MAN IN RIGHT PLACE

    appreciate your social service.

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.