Monday, March 19, 2012

அம்மை நோய் புகார் எதிரொலி! பள்ளி மாணவ,மாணவிகளுக்கு சிகிச்சை !



கீழக்கரை பகுதியில் ஏராளமானோர் 'பொன்னுக்கு வீங்கி அம்மை" நோயால் நூற்றுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பள்ளி குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டு அவதியடைந்து வருகின்றனர்.

இது தொற்று நோய் வகையை சேர்ந்தது என்பதால் அடுத்தடுத்த பகுதிகளுக்கு நோய் பரவியது.இதனால் பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.


இது குறித்து இஸ்லாமியா பள்ளிகளின் தாளாளர் எம்.எம்.கே.முகைதீன் இப்ராகீம் மாவட்ட சுகாதரத்துறையினர் இணை இயக்குநர் மற்றும் நகராட்சி கமிஷனருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து இன்று பகல் இஸ்லாமியா பள்ளி வளாகத்தில் அரசு டாக்டர்கள் செய்யது ராசிக் தீன்,வெங்கடேஷ் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் பாதிக்கப்பட்ட‌ மாணவ,மாணவிகளை பரிசோதித்து உரிய மருத்துவம் மற்றும் ரத்த சேகரிப்பு செய்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து டாக்டர் செய்யது ராசீக்தீன் கூறுகையில் ,

வைரஸ் கிருமிகளால் இந்நோய் ஏற்படுகிறது .இது தொற்று நோய் என்பதால் குழந்தைகளுக்கு வேகமாக பரவியுள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு ரத்தம் மாதிரி எடுக்கப்பட்டுள்ளது.அறிக்கை வந்ததும் மேல் சிகிச்சை அளிக்கப்படும்

இந்த நோயின் தாக்கம் 2 அல்லது 3 வாரங்களுக்கு இருக்கும் இந்த நோயினால் சிறியவர்களை விட பெரியவர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.. இந்த நோய் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.