Thursday, March 22, 2012

நகராட்சியை கண்டித்து வித்தியாச கெட்டப்பில் ஊர்வலமாக வந்த கவுன்சிலர்கள் !



கீழக்கரை நகராட்சி கூட்டம் நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா தலைமையில் துணை தலைவர் ஹாஜா முகைதீன் முன்னிலையில் நடைபெற்றது.

கீழக்கரை நகராட்சி கூட்டம் இன்று மாலை 4.30 மணியளவில் தொடங்கி 7 மணி வரை நடைபெற்றது.

கீழக்கரை நகராட்சியில் நடைபெறும் முறைகேடுகளை கண்டிப்பதாக கூறி திமுக கவுன்சிலர்கள் இடிமின்னல் ஹாஜா நஜிமுதீன்(20வது வார்டு) வாயில் பணத்தை ஒட்டி கொண்டு பண மாலை அணிவித்து கொண்டும்,5வது வார்டு கவுன்சிலர் சாகுல் ஹமீது குடிநீர் மேல் தொட்டி போல் மாதிரி செய்து தலையில் அணிந்து கொண்டு ஊர்வலமாக நகராட்சி கூட்டத்துக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


இது குறித்து இடிமின்னல் ஹாஜா கூறுகையில் ,
நகராட்சியில் புதியதாக குடிநீர் பைப்கள் அமைப்பதற்கு ரூ1 கோடியும்,வாறுகால் வாய்கால் கட்டுவதற்கு ரூ50லட்சமும்,குப்பைகிடங்கு தளம் மற்றும் சுற்று சுவர் கட்டுவதற்கு ரூ 50 லட்சமும் ஒதுக்கப்பட்டு டெண்டர் விடப்பப்பட்டது.இதில் பெருமளவு முறைகேடு நடந்துள்ளது.இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த‌ வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இது போன்று பணமாலை அணிந்து வந்துள்ளேன் என்றார்.

இது குறித்து கவுன்சிலர் சாகுல்ஹமீது கூறுகையில் ,இரண்டு குடிதண்ணீர் மேல்நிலை தொட்டிகள் பழுதடைந்துள்ளது.அதை புதியதாக கட்டாமல் பைப் மட்டும் அமைப்பது சரியல்ல என்பதை தெரியப்படுத்த தண்ணீர் தொட்டிபோல் மாதிரி செய்து தலையில் மாட்டி வந்துள்ளேன் என்றார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.