Thursday, March 22, 2012

கிடப்பில் போடப்பட்ட கீழக்கரை தனி தாலுகா அறிவிப்பு!விரைந்து செயல்படுத்தப்படுமா ?


ராமநாதபுரம் தாலுகா அலுவலகம்

கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் போன்றவர்களின் பரிந்துரைகளின் பேரில் சாதிச் சான்றிதழ், வருவாய்ச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ், உள்பட பல்வேறு சான்றிதழ்கள் தாலுகா அலுவலகம் மூலம் வழங்கப்படுகிறது.

கீழக்கரை ராமாநாதபுரம் தாலுகாவோடு இணைக்கப்பட்டுள்ளதால் பல்வேறு அலுவல்களுக்கு ராமாநாதபுரம் தாலுகா அலுவலகம் செல்ல வேண்டுய சூழ்நிலை உள்ளது.

இந்நிலையில் கீழக்கரையை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல்லாண்டுகளாக கீழக்கரையை சேர்ந்த‌ பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர் .இக்கோரிக்கையை ஏற்று கடந்த திமுக அரசு கீழக்கரையை தனி தாலுகவாக அறிவித்தது.இதன் பேரில் கீழக்கரை அருகே முள்ளுவாடி பகுதியில் தனியாருக்குச் சொந்தமான இடத்தை தாலுகா அலுவலகத்துக்குத் தர முன் வந்ததைத் தொடர்ந்து வட்டாட்சியர் தலைமையில் அதிகாரிகள் அவ்விடத்தை பார்வையிட்டனர் விரைவில் ஒப்புதல் பெறப்பட்டு பணிகள் தொடங்கும் என்றனர்.இது நடைபெற்று மாதாங்களாகி விட்டது .

விரைந்து செய‌ல்ப‌டுத்த‌ கோரி த‌மிழ‌க‌ அர‌சுக்கு ம‌னு அனுப்ப‌ உள்ள‌தாக‌ ச‌மூக‌ ந‌ல‌ நுக‌ர்வோர் அமைப்பின‌ர் தீர்மான‌ம் நிறைவேற்றி உள்ள‌ன‌ர்.

கீழ‌க்க‌ரை ச‌மூக‌ ந‌ல‌ நுக‌ர்வோர் சேவை இய‌க்க‌த்தின் பொதுக்குழு கூட்ட‌ம் ந‌டைபெற்றது. நிர்வாகிகள் செய்யது இப்ராகிம்,ந‌ல்ல‌ இப்ராகிம் ,த‌ங்க‌ம் ராதாகிருஸ்ண‌ன் உள்ப‌ட‌ ப‌ல‌ர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.

காரைக்குடியிலிருந்து கீழ‌க்க‌ரை வ‌ழியாக‌ க‌ன்னியாகும‌ரி வ‌ரை புதிய‌ அக‌ல‌ ர‌யில் பாதை திட்ட‌த்திற்கு ம‌த்திய‌ ப‌ட்ஜெட்டில் நிதி ஒதுக்காத‌து குறித்து ம‌த்திய‌ அர‌சிற்கு ம‌னு அனுப்புவ‌து என்றும்,கீழ்க்க‌ரை த‌னி தாலுக‌வாக‌ அறிவிக்க‌ப்ப‌ட்டும் கிட‌ப்பில் போட‌ப்ப‌ட்டுள்ள‌து இதை விரைவாக‌ செயல்ப‌டுத்த கோரி த‌மிழ‌க‌ அர‌சிற்கும்,ராமாநாத‌புர‌ம் ச‌ட்ட‌ம‌ன்ற‌ உறுப்பின‌ருக்கும் ம‌னு அனுப்புவ‌து என்றும் உள்ளிட்ட‌ ப‌ல்வேறு தீர்மாண‌ங்க‌ள் நிறைவேற்ற‌ப்ப‌ட்ட‌ன‌.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.