Saturday, March 17, 2012

கீழக்கரையில் அரசு மருத்துவ காப்பீடு அட்டை வ‌ழ‌ங்க‌ல்!உரிய‌வ‌ர்கள் அட்டை பெறுவதற்கான இடம் அறிவிப்பு!


ப‌ட‌ விள‌க்க‌ம்- ம‌ருத்துவ‌ காப்பீடு அட்டை வ‌ழ‌ங்கும் நிக‌ழ்ச்சியை ந‌க‌ராட்சி துணை த‌லைவ‌ர் ஹாஜா முகைதீன் தொட‌ங்கி வைத்தார்

கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட மக்கள் அரசின் மருத்துவ காப்பீடு அட்டையை முஸ்லீம் பஜாரில் உள்ள‌ க‌பீர் தைக்கா வ‌ளாக‌த்தில் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் விரிவாக‌ காப்பீடு திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 1.34 கோடி மக்களுக்கு மருத்துவ சேவை பெறும் வகையில் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் வருவாய் கீழ் உள்ளவர்கள் இத்திட்டத்துக்கு தகுதியானவர்கள். காப்பீட்டு திட்டம் மூலம் மருத்துவ வசதி, ஒரு குடும்பத்துக்கு ஒரு லட்சம் வீதம், நான்கு ஆண்டுக்கு 4 லட்சம் வரை செலவிட வழிவகை செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சிகிச்சை முறைகளுக்கு ஆண்டுக்கு 1.50 லட்சம் வரை வழங்கப்படுகிறது.


இந்நிலையில் கீழக்கரையில் தமிழக அரசின் விரிவான காப்பீட்டு திட்டத்துக்கான புதிய அடையாள அட்டை வழங்கும் விழா நகராட்சி துணைதலைவர் ஹாஜா முகைதீன் தலைமையில் கவுன்சிலர்கள் முன்னிலையில் முஸ்லீம் பஜார் கபீர் தைக்கா வளாகத்தில் நடைபெற்றது.

கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட மக்களுக்கு மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியை நகராட்சி துணை தலைவர் ஹாஜா முகைதீன் தொடங்கி வைத்தார்.
இதில் ம‌ருத்துவ‌ காப்பீடு திட்ட‌ மாவ‌ட்ட‌ ஒருங்கினைப்பாள‌ர் சுரேஷ்குமார்,த‌க‌வ‌ல் தொட‌ர்பு அதிகாரிக‌ள் ச‌ந்தோஷ் க‌ண்ண‌ன்,நாக‌குமார்,கவுன்சிலர்கள் முகைதீன் இப்ராகிம்,அன்வர் அலி உள்ளிட்டோர் க‌ல‌ந்து கொண்டு பொதும‌க்க‌ளுக்கு காப்பீடுதிட்ட‌ அடையாள‌ அட்டையை வ‌ழ‌ங்கின‌ர்.


மேலும் இது குறித்து சுரேஷ் குமார் கூறிய‌தாவ‌து, ம‌ருத்துவ‌ காப்பீடு அடையாள‌ அட்டையை த‌ங்க‌ள் ரேஷ‌ன் கார்டுக‌ளை காண்பித்து முஸ்லீம் பஜாரில் உள்ள‌ க‌பீர் தைக்கா வ‌ளாக‌த்தில் பெற்றுக் கொள்ள‌லாம் என்றார்.

இத்திட்டத்தில் குழந்தைகள் சிகிச்சை முறை உட்பட 1,016 சிகிச்சை முறைகள், 113 தொடர் சிகிச்சை வழிமுறை, 23 அறிதல் கண்டுபிடிப்பு முறைகள் உள்ளன. குழந்தைகள் முதல் முதியோர் வரை பயன்பெறலாம். இருதயம் மற்றும் இருதய அறுவை சிகிச்சை, புற்றுநோய் மருத்துவம், சிறுநீரக கோளாறு, மூளை, நரம்பு மண்டலம், கண் நோய், குடல் நோய்கள், ஒட்டுறுப்பு (பிளாஸ்டிக்) அறுவை சிகிச்சை, காது, மூக்கு மற்றும் தொண்டை நோய்கள், கருப்பை மற்றும் ரத்த உள்ளிட்ட நோய்களுக்கான சிகிச்சை பெறும் வசதியை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.