Wednesday, March 21, 2012

புதிய ந‌க‌ராட்சி ப‌த‌வியேற்று அடிப்ப‌டை தேவைக‌ளை நிறைவேற்ற‌வில்லை !கீழக்கரை மக்கள் நல பாதுகாப்பு க‌ழ‌க‌ம் கண்டன தீர்மான‌ம்!


படம் : சிறப்புக் கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகளின் ஒரு பகுதி

கீழக்கரை மக்கள் நல பாதுகாப்பு கழகத்தின் சிறப்பு கூட்டம் தலைவர் தமீமுதீன் தலைமையில் நகர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் துணைத்தலைவர் மாணிக்கம், செயலாளர் முகைதீன் இப்ராகீம், இணை செயலாளர் செய்யது சாகுல் ஹமீது, பொருளாலர் முகம்மது சாலிஹ் ஹுசைன்(கீழை இளையவன்), செய்தி தொடர்பாளர் ஜெகதீஸ்
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கீழக்கரை நகர்மன்றம் பொறுப்பேற்று நான்கு மாதம் ஆகியும் நகருக்கு வேண்டிய அடிப்படை தேவைகளை நிறைவேற்றாமல் இருப்பதை கண்டித்தும்,
இக்குறைபாடுகள் களைய கீழக்கரை நகராட்சிக்கு தனி ஆணையர் நியமனம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,
தமிழக அரசு அறிவித்துள்ள மின்வெட்டு நேரத்தை விட கூடுதலாக மின்சாரத்தை நிறுத்தி பொதுமக்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் கீழக்கரை மின்சார வாரியத்தை கண்டித்தும்,

மனித உரிமை மீறலில் ஈடுபட்ட இலங்கை அரசுக்கு எதிரான ஐக்கிய நாட்டு சபை தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் முசம்மில் உசேன், சீனி முகம்மது சேட், பக்ருதீன், உள்பட உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தலைவர் தமீமுதீன் கூறியதாவது,

எங்களது அமைப்பான மக்கள் நல பாதுகாப்பு கழகத்தில் பொருளாளர் பதவி வகித்த சா லிஹ் ஹுசைன்(கீழை இளையவன்) அவர்கள் சில நாட்களுக்குமுன் அமைப்பில் ஏற்பட்ட சில குறைபாடுகளால் மனவருத்தம் அடைந்து வலைபதிவு மற்றும் முக புத்தகத்தில் தனது பதவியை ராஜினாமா பண்ணுவதாக அறிவித்து இருந்தார் , இது எங்களுக்கு மிகுந்த வேதனை அளிப்பதாக இருந்தது.

அமைப்பு தொங்கி 10 வருட காலமாக நமது ஊர் கீழக்கரை சுகாதாரம் மற்றும் அரசு அலுவலக குறைபாடுகளை சுட்டிக்காட்டி பல தீர்வுகள் எடுத்ததில் எங்களது அமைப்பு முக்கியம் வகித்துள்ளது. இதற்க்கு பல ஆதாரங்களும் ஆவணகளும் எங்களிடம் உள்ளன, மேலும் சாலிஹ் ஹுசைன்(கீழை இளையவன்) அவர்களுடைய நியாயமான கோரிக்கைகளை கழகம் அங்கீகரித்ததின் பேரில் அவர் மீண்டும் பதவி தொடர்வதாக கூறியுள்ளார்,

இன்ஷாஅல்லா வரும் காலங்களில் நம் அமைப்பின் நிர்வாகி மற்றும் உறுப்பினர்கள் அமைப்பு மற்றும் அமைப்பு சாரா குறைகளை தலைமையில் தெரிவித்தபின், பிறர் அறிய செய்யும் படி கேட்டு கொள்கிறோம், மேலும் நாம் நமது நகராட்சி செயல்களின் குறைகளை மட்டும் காணாது அவர்கள் செய்த நன்மைகளையும் அறிந்து வாழ்த்து தெரிவிப்பது கடமையாகும்" என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.