Tuesday, March 20, 2012

டில்லியில் கீழக்கரை சதக் கல்லூரி மாணவர் சாதனை !


டில்லியில் உள்ள இந்திய தொழில் நுடபக் கழகம் சார்பில் நடந்த தேசிய அளவிலான கருத்தரங்கத்தில் கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரி மாணவர் சதீஸ் பிரபாகர் இரண்டாம் பரிசு பெற்றார்.இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 500க்கும் அதிகமான கணித துறையை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர்கள் கருத்தரங்கத்தில் கலந்து கொண்டனர்.

""காந்த புலத்தின் உதவியால் உலோகத்தை கண்டறியும் இயந்திர மனிதன்'' என்ற ஆய்வுக்கட்டுரையை படைத்த கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரி மாணவர் சதீஸ் பிரபாகர் இரண்டாம் பரிசாக ரூ.5 ஆயிரம் பெற்றார்.

கல்லூரி நிர்வாக தலைவர் ஹமீது அப்துல் காதர், தாளாளர் யூசுப் சாஹிப்,இயக்குனர் ஹபீப் முகம்மது சதக்கத்துல்லா, முதல்வர் முகம்மது ஜகபர், கணினி துறை தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் மாணவரை பாராட்டினர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.