Thursday, March 29, 2012

கீழ‌க்க‌ரை செய்ய‌து ஹ‌மீதா க‌ல்லூரியில் மரக்கன்று ந‌டும் நிக‌ழ்ச்சி !


கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக மரம் நடுவிழா கல்லூரி முதல்வர் அபுல் ஹசன் சாதலி தலைமையில் நடைபெற்றது.

கல்லூரியின் மேலாண்மைத் துறை தலைவர் நாசர் மரக்கன்று நிகழ்ச்சியினைத் தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சி குறித்து வணிகவியல் துறைத் தலைவர் பாலகிருஷ்ணன் கூறுகையில், இந்த வாரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் தேசிய வனநாள், உலக தண்ணீர் தினம் ஆகியவற்றை இந்த வாரத்தில் நாம் கொண்டாடி வருகிறோம். வனத்தை பாதுகாப்பதற்கும் தண்ணீரை சேமிப்பதற்கும் மரங்களே இன்றியமையாதவை. ஆகவே மாணவ, மாணவியர் அனைவரும் இது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று, இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆனந்த், முகம்மது இபுராகீம், அக்பர் ஜகான் ஆகியோர் செய்திருந்தனர்.
கல்லூரியின் செஞ்சுருள் சங்க ஒருங்கிணைப்பாளர் ஆர்.டி.நெல்சன் டேனியல், நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளைப் பாராட்டினார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.