Thursday, March 22, 2012

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடக்கமாக ச‌தக்‌ பாலிடெக்னிக் க‌ல்லூரியில் அர‌சு லேப்டாப் வ‌ழ‌ங்கும் நிக‌ழ்ச்சி !



மாணவ-மாணவிகளுக்கு இலவச லேப்-டாப் வழங்க தமிழக அரசு அறிவித்ததின் பேரில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும், கலை, மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி படிக்கும் மாணவ- மாணவிகளுக்கும் லேப்-டாப் வழங்கப்படுகிறது.


இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடக்கமாக‌ கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவ,மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.மாவ‌ட்ட‌ ஆட்சிய‌ர் ந‌ந்த‌குமார் த‌லைமை வ‌கித்து லேப்டாப்க‌ளை மாண‌வ‌ர்க்ளுக்கு வ‌ழ‌ங்கினார்.

கல்லூரி முதல்வர் ஜகாபர் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் அலாவுதீன் வரவேற்று பேசுகையில் ,
இந்த கல்லூரியில் ஆயிரத்து 394 லேப்டாப்கள் கொடுக்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது.நிர்ணயிக்கப்பட்ட அனைத்து லேப்டாப்களும் இரண்டு கட்டமாக வழங்கப்படும் என்றார்.

மாவட்ட ஆட்சியர் பேசுகையில்,

ஏழை எளிய‌ மாண‌வ‌ர்களுக்கு எட்டாக்க‌னியாக‌ இருந்த‌ லேப்டாப் இன்று எட்டுக‌னியாக‌ கிடைத்துள்ள‌து. மேலும் இந்த‌ லேப்டாப்பில் திருக்குற‌ள் அனைத்து குற‌ள்க‌ளும் அத‌ன் தெளிவுரையும் உள்ள‌து.அனைத்துதுறையுன் பாட‌த்திட்ட‌ங்க‌ள் ம‌ற்றும் அண்ணா ப‌ல்க‌லைக‌ழ‌க‌த்தின் பேராசிரிய‌ர்க‌ளின் பாட‌தொகுப்பும் இணைக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

அனைத்து துறையின் பாட‌த்திட்ட‌ங்க‌ள் ம‌ற்றும் அண்ணா ப‌ல்க‌லைக‌ழ‌க‌த்தின் பேராசிரிய‌ர்க‌ளும் பாட‌தொகுப்பும் இதில் இணைக்கப்ப‌ட்டுள்ள‌து.இத‌ன் மூலம் மாணவ‌ர்கள் ந‌ல்ல‌ அறிவாற்ற‌லையும்,க‌ல்விய‌றிவையும் அதிக‌ரித்து கொள்ள‌ வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.