Monday, March 26, 2012

செய்யது முகமது அப்பா தர்காவில் கந்தூரி விழா துவங்கியது


மகான் செய்யது முகமது அப்பா ஒலியுல்லா தர்ஹாவில் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ஜாதி, மத பேதமின்றி ஏராளமான பொதுமக்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

கீழக்கரை மேலத்தெரு பகுதியில் மகான் செய்யது முகமது அப்பா ஒலியுல்லா தர்ஹா உள்ளது. இங்கு, நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் கந்து�ரி விழா தொடங்கியது. கந்தூரி விழாவில், ஜாதி, மத பேதமின்றி ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். முன்னதாக உலக ஒற்றுமைக்காகவும், மத நல்லிணக்கத்திற்காகவும், மாவட்ட ஹாஜி சலாஹூதீன் ஆலிம் சிறப்பு பிராத்தனை (துஆ) ஓதினார்.

தொழில் அதிபர் சித்திக் முன்னிலையில் பக்தர்களின் நாரே தக்பீர் முழக்கத்துடன் கொடி ஏற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து மவுலீது சரீப் (புகழ்பாடி) நடை பெற்று நார்ஸா வழங்கப்பட்டது. ஏப். 6ல் (முஸூவு) சந்தனம்பூசும் விழா, ஏப். 22ல் கொடி இறக்கப்பட்டு ஆயிரக்கணக்கானோருக்கு (தப்ரூக்) செய்சோறு வழங்கப்படும்.

இதற்கான ஏற்பாடுகளை தர்ஹா இயக்குனர் சதக்கத்துல்லா மற்றும் விழா குழு வினர்கள் மக்பூல் சுல்தான், பீர்முகம்மது ஆலிம், கே.எம்.மீராசா, அடுமை, பாரூக், காசிம், மற்றும் பலர் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.