Sunday, March 4, 2012

கீழக்கரையில் நாளை( 05-03-12 ) முக்கிய‌ கூட்டம் ! பொதுமக்கள் கலந்து கொள்ள காவல்துறை அழைப்பு !


நம் கீழக்கரை நகரில் குற்ற செயல்களைத் தடுக்கும் முயற்சியாகவும், பொது மக்கள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய நடை முறைகள் குறித்து விழிப்புணர்வு எற்படுத்துவதற்காகவும், கீழக்கரை காவல் நிலையம் சார்பாக, துண்டுப் பிரசுரம் (நோட்டீஸ்) விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த துண்டுப் பிரசுரத்தில், பொது மக்கள் கடைப் பிடிக்க வேண்டிய பல அத்தியாவசிய நடை முறைகள் தெளிவாக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த பொதுமக்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம் நாளை ( 05-03-12 ) திங்கட்கிழமை கீழக்கரை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள கண்ணாடி வாப்பா மஹாலில் நடை பெற உள்ளதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது.

கீழக்கரை பொது மக்கள் அனைவரும் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் திரளாக கலந்து கொண்டு தங்களது ஆலோசனைகளை கூறுவதற்கு காவல் துறையினர் சார்பில் பொது மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.தகவல்: சாலிஹ் ஹுசைன்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.