Saturday, March 24, 2012

நகராட்சியில் அதிகாரிகளை நியமிக்காததால் சான்றிதழ்கள் தாமதம்! பொதுமக்கள் அவதி !



கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சியில் அதிகாரிகள் நியமிக்கபடதாதால் பல்வேறு பணிகள் முடங்கியுள்ளதாகவும் பொதுமக்களுக்கு பிறப்பு ,இறப்பு சான்றிதழ்கள் கிடைப்பதே அரிதாகி விட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மிக முக்கியமாக நகராட்சி கமிஷனர் இது வரை நியமிக்கப்படவில்லை ராமநாதபுரம் கமிஷனர்தான் கூடுதல் பொறுப்பாக கீழக்கரையிலும் பணியாற்றி வருகிறார்.

இது குறித்து நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா சம்பந்தப்பட்ட அமைச்சரையும்,உயர் அதிகாரிகளையும் சந்தித்து இது குறித்து உடனடி ஏற்பாடு செய்ய கோரிக்கை வலியுறுத்தி வந்தார்.

இந்நிலையில் நகராட்சி துணை தலைவர் ஹாஜா முகைதீன் ஆணையருக்கு ( நகராட்சிகள் நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நகராட்சிகள் நிர்வாக ஆணையகம்) இது குறித்து மனு அனுப்பியுள்ளார்

அதில் கூறியிருப்பதாவது,

கிழக்கரை நகராட்சியில் பல மாதங்களாக அணையாளர் மற்றும் சுகாதார ஆய்வாளர் பணியிடம் காலியாக உள்ளது. இராமநாதபுரம் நகராட்சி ஆணையாளர் அவர்களுக்கு கீழக்கரை நகராட்சி ஆணையாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

கீழக்கரை நகராட்சியில் சுகாதார ஆய்வாளர் பணியில் இருந்த சரவணன் என்பவர் மாற்றப்பட்டு 4 மாதங்கள் ஆகின்றன. இது நாள் வரை கீழக்கரை நகராட்சிக்கு சுகாதார ஆய்வாளர் நியமிக்கபடவில்லை. மேலும் கீழக்கரை நகராட்சியில் ஒவர்சீராக பணியில் இருந்த மணி என்பவர் மாற்றப்பட்டு மதுசூதணன் என்பவர் வந்தார் அவரும் அலுவலகத்திற்கு சரியாக வருவது இல்லை. விடுமுறையில் இருந்து வருகின்றார். கீழக்கரை நகராட்சியில் அசிஸ்டெண்ட் பணியில் உள்ள சந்திரசேகர் என்பவரும் பணியை சரவர செய்வதில்லை. மொத்தத்தில் கீழக்கரை நகராட்சியில் முக்கிய பொறுப்புகளில் ஆள் இல்லாமல் உள்ளதால் அலுவலக பணிகள் முற்றிலும் முடங்கி விட்டன. அலுவலகத்தில் அனைத்து பணிகளையும் சில அலுவலக இளநிலை உதவியாளர்கள் தான் செய்து வருகின்றார்கள்.

கீழக்கரை நகராட்சியில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள், வீட்டு வரிபெயர் மாற்றம் மற்றும் கட்டிட வரை பட அனுமதி போன்றவற்றிற்காக கீழக்கரை நகர் மக்கள் பல மாதங்களாக நகராட்சி அலுவலகம் வந்து அலைகின்றனர். நகருக்கு அத்தியாவசிய திட்ட பணிகள் செய்ய முடியாமல் முடங்கிப்போய் உள்ளன.

கீழக்கரை நகராட்சியில் பணியாளர்கள் மிகவும் குறைவாக உள்ளனர் கீழக்கரை பேரூராட்சியாக இருந்த காலகட்டத்தில் சுமார் 30 வருடங்களுக்கு முன்பாக இருந்த (Sanitary workers) பொது சுகாதார பணியாளர்கள் எண்ணிக்கை தான் இன்றைய தேதி வரை நீடிக்கின்றது. நகர் கடந்த 30 ஆண்டுகளில் பல மடங்கு விரிவடைந்துள்ளது மக்கள் தொகையும் கனிசமாக உயர்ந்துள்ளது.

கீழக்கரை நகராட்சியின் அவசியம் கருதி உடனடியாக ஒரு நல்ல நிர்வாக திறமையுள்ள ஆணையாளர், சுகாதார ஆய்வாளர் மற்றும் ஒவர்சீர் (பணிமேற்பார்வையாளர்) ஆகிய மூன்று முக்கிய காலி பணியிடங்களை உடன் நிரப்ப வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நகராட்சி அந்தஸ்த்துக்கு உயர்ந்துள்ள கீழக்கரை நகருக்கு தேவையான புதிய பணியிடங்களை நிரப்ப உடன் அரசு ஆணை ஏற்படுத்தி தர வேண்டுமாறு நகராட்சிகள் நிர்வாக ஆணையர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்,
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.