Monday, March 19, 2012

கீழக்கரை சதக் கல்லூரியில் முதுகலை மாணவர்களுக்கான கருத்தரங்கம் !


கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரி முதுகலை கணிப்பொறி பயன்பாட்டியல் துறை சார்பாக மாணவர்களின் தனிதிறன் வெளிபடுத்தும் கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
கல்லூரி இயக்குநர் ஹபீப் தலைமை வகித்தார்.கல்லூரி முதல்வர் முகம்மது ஜகாபர் முன்னிலை வகித்தார். துறை தலைவர் முகம்மது ரபி வரவேற்றார்.

சென்னையை தேசிய தொழில் நுட்ப ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் கணிப்பொறி தலைவர் சம்பந்தன் கலந்து கொண்டு பேசினார்.

முன்னதாக மாணவர்களின் அறிவுதிறனை வெளிபடுத்தும் விதமாக தனிதிறன் வெளிபாடு,வினாடி வினா,மென்பொருள் பிழை நீக்கம், உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.வெற்றி பெற்றவர்களுக்கு சம்பந்தன் பரிசுகள் வழங்கினார்.

ஆசிரியர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.