Monday, March 12, 2012

கோஷ்டி மோதல் ! கீழக்கரை அருகே பதற்றம் !போலீஸ் குவிப்பு !

‌கீழ‌க்க‌ரையை அடுத்த‌ திருப்புல்லாணி மேல‌ப்புதுக்குடியில் இருகோஷ்டியின‌ர் மோதி கொண்ட‌தில் 4 பேர் ப‌டுகாய‌ம‌டைந்த‌ன‌ர்.இத‌னால் அங்கு ப‌த‌ற்ற‌ம் நில‌வுகிற‌து.

காயமடைந்த ஜஹாங்கிர்

தாக்குதலுக்குள்ளனாதாக கூறப்படும் தொழுகை பள்ளியில் கற்கள் சிதறி கிடக்கும் காட்சி

காயமடைந்த குமார்
கீழ‌க்க‌ரையை அடுத்த‌ திருப்புல்லாணி மேல‌ப்புதுக்குடியில் இருகோஷ்டியின‌ர் மோதி கொண்ட‌தில் 4 பேர் ப‌டுகாய‌ம‌டைந்த‌ன‌ர்.இத‌னால் அங்கு ப‌த‌ற்ற‌ம் நில‌வுகிற‌து.
போலீசார் குவிக்கப்ப‌ட்டுள்ள‌ன‌ர்.

திருப்புல்லாணி ஒன்றிய‌த்திற்கு உட்ப‌ட்ட‌ சேதுக்க‌ரை ஊராட்சி ம‌ன்ற‌ கூட்ட‌ம் த‌லைவ‌ர் முனியான்டி த‌லைமையில் ந‌டைபெற்ற‌து.அப்போது தீர்மான‌ புத்த‌க‌த்தில் கையெழுத்து போடும்ப‌டி த‌லைவ‌ர் முனியாண்டி கவுன்சிலர் நசீரிடம் கேட்டுள்ளார்.அத‌ற்குக‌ண‌க்கு காட்டாம‌ல் தீர்மான‌த்தில் கையெழுத்து போட‌முடியாது என்று க‌வுன்சில‌ர்க‌ள் ந‌சீர் ஹுசைன் அச‌ர‌ப் நிஷா இருவ‌ரும் ம‌றுத்துள்ள‌ன‌ர்.

அப்போது இருத‌ர‌ப்புக்குமிடையே வாக்குவாத‌ம் ஏற்ப‌ட்டுள்ள‌து.அப்போது அங்கு வ‌ந்த‌ த‌லைவ‌ர் த‌ர‌ப்பை சேர்ந்த‌ குமார் என்ப‌வ‌ர் ந‌சீர் ஹீசைனை தாக்கிய‌தாக நசீர் ஹிசைன் தரப்பினர் தெரிவித்தனர்.

இத‌ன் தொட‌ர்ச்சியாக‌ த‌லைவ‌ர் முனியாண்டியின் சொந்த‌ ஊரான‌ சேதுக‌ரையிலிருந்து அவரது ஆதரவாளர்கள் ஊருக்குள் புகுந்து அங்குள்ள‌வ‌ர்க‌ளை தாக்கிய‌தோடு தொழுகை ப‌ள்ளிக்குள் க‌ற்க‌ளை வீசி தாக்கிய‌தாக‌ கூற‌ப்ப‌டுகிறது.இருதரப்புக்குமிடையே மோதல் ஏற்பட்டதுஇம்மோத‌லில் 4 பேர் காய‌ம‌டைந்த‌ன‌ர்.

இதுகுறித்து ஊராட்சி ம‌ன்ற‌ த‌லைவ‌ர் முனியாண்டி கூறுகையில் ,மாதாந்திர‌ கூட்ட‌த்தில் ந‌சீர் ஹீசைனை கையெழுத்து போட‌ சொன்னேன் அவ‌ர் என்னை ஒருமையில் பேசினார். அப்போது எங்க‌ள் ஆள் குமார் த‌ட்டி கேட்டார் இத‌னால் கூட்ட‌ம் முடிந்து வெளியில் சென்ற‌ போது ந‌சீர் ஹீசைன் அண்ண‌ன் ஜ‌ஹாங்கிர் குமாரை வ‌ழி ம‌றித்து இரும்பு க‌ம்பியால் தாக்கியுள்ளார்.என‌வே ந‌சீர் ஹுசைன் த‌ர‌ப்புதான் பிர‌ச்ச‌னையை தொட‌ங்கி வைத்த‌ன‌ர் என்றார்.
கீழக்கரை இன்ஸ்பெக்டர் இளங்கோவன்,திருப்புல்லாணி எஸ்.ஐ., மணிமாறன் விசாரணை நடத்தி வருகிறார்.மேலப்புதுக்குடி கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

2 comments:

  1. பிரச்சனையோ ஊர் பஞ்சாயத்தில் கவுன்சிலருக்கும் ,தலைவருக்கும் ....ஆனால் வழிபாடு தளத்தை நொறுக்கும் இந்த செயல் வன்மையாக தண்டிக படவேண்டும், பள்ளிவாசலலை நொறுக்கும் அளவிற்கு துணித்து இருப்பது சந்தேகத்தை கிளப்புகிறது !!!

    சேது கரை காவிகரை யாக மாறிவிட்டதோ ??????
    இதை மன்னிக்கவே முடியாது .....

    ஒமற்று மத சஹோததர்கலே குஞ்சம் சிந்தித்து பாருங்கள் எங்காவது கோவில் மேல் கல் ஏறிந்த தகவல் உண்ட ?? தீவைத தகவல் உண்ட ??? இதலாம் யார் செய்கிறார்கள் ????

    கொஞ்சம் சிந்தியுங்கள் ?? சஹோதரனாக வாழ்வோம் தீய சக்திகளை அழிப்போம் !!! இறைவன் நாடினால்

    ReplyDelete
  2. முனியாண்டி தன்னை ஒற்றுமையில் பேசினார்கள் என்கிற காரணத்தால் வெளி ஊரில் இருந்து ஆட்களை கொண்டு வந்து முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் கலவரத்தை மூட்டி, அவர்களை அடித்து நொறுக்கி அவர்களின் வழிபாட்டு தளத்தை நொறுக்குகிறார் என்றால் அவருக்கு அத்துணை தைரியத்தை கொடுத்தது யார் ?? இவரை இயக்குவது எந்த பாசிச கும்பல் ஆர்.எஸ்.எஸ். சின் வலையில் இந்த முனியாண்டி சிக்கி உள்ளாரா ஒரு ஊராட்சியின் தலைவரே இந்த காரியத்தை செய்யத்துநிகிறார் என்றால் அங்கெ சகோதர வாஞ்சையுடன் வசிக்கும் ஹிந்துக்களின், நிலையம் முஸ்லிம்களின் நிலையும் என்ன எனவே காவி வேரிபுடித்து அலையும் முனியாண்டியை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் இவரை இயக்குபவர்கள் யார் என்பதையும் தமிழக அரசு கண்டு இனி இதுபோன்ற வன்முறை நடக்காமல் பாதுகாக்கவேண்டும்
    ஹமீது பைசல்

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.