Saturday, March 10, 2012

கீழக்கரை அருகே மனைவியை வெட்டி கொலை செய்த கணவன் கைது !



கீழக்கரையை அடுத்துள்ள பழஞ்சிறை கிராமத்தை சேர்ந்த ஜெகநதாத் மகன் செல்வக்குமார்(28), இவரது மனைவி ராஜேஸ்வரி இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன.இந்நிலையில் இருவருக்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது.

செல்வகுமார் வெளிநாட்டில் ச‌ம்பாதித்து அனுப்பிய‌ ப‌ண‌ங்க‌ளையும்,ந‌கைக‌ளையும் ஊதாரித‌ன‌மாக‌ செல‌வ‌ழித்து விட்ட‌தாக‌வும்,தன்னுடன் சேர்ந்து வாழமல் அடிக்க‌டி தாய் வீட்டுக்கு சென்று விடுவ‌தாக‌வும் குற்ற‌ம் சாட்டி வ‌ந்த‌ க‌ண‌வர் செல்வ‌குமார் ஆத்திர‌ம‌டைந்து நேற்று தோட்டத்தில் ஆடுக‌ளை க‌ட்டி திரும்பிய‌ ம‌னைவி ராஜேஸ்வ‌ரியில் க‌ழுத்தில் அரிவாள‌ல் வெட்டியுள்ளார்.ச‌ம்ப‌வ‌ இட‌த்திலேயே ராஜேஸ்வ‌ரி ப‌லியானார்.இவ்வாறு காவ‌ல்துறை த‌ர‌ப்பில் கூற‌ப்படுகிற‌து.

இது குறித்து கீழ‌க்க‌ரை போலீசார் வ‌ழ‌க்கு ப‌திவு செய்து செல்வ‌க்குமாரை கைது செய்துள்ள‌ன‌ர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.