Monday, February 18, 2013

கீழக்கரை பொறியியல் கல்லூரியில் "சோர்பிங்" 13 நிக‌ழ்ச்சி!

கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியின் கணிப்பொறியியல் துறை சார்பில் அசோசியேசன் துவக்க விழா மற்றும் சார்பிங்&13  நிக‌ழ்ச்சி நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் முகம்மது ஜகாபர் தலைமை வகித்தார். கல்லூரி நிறுவனத்தலைவர் ஹமீது அப்துல்காதர், தாளாளர் யூசுப்சாகிபு, இயக்குநர் ஹபீப்முகம்மது சதக்கத்துல்லா முன்னிலை வகித்தனர். கணிப்பொறியியல் துறை பேராசிரியர் சேக்யூசுப் வரவேற்றார். பேராசிரியர் கார்த்திகேயன் ஆண்டறிக்கை வாசித்தார்.
விழாவில் சி.டி.எஸ். மற்றும் ஐ.பி.எம். ஆகிய மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் முன்னாள் மாணவர்கள் முகம்மது சுல்பிகார் மற்றும் தினேஷ்பாபு பேசினர். மாணவர்களின் திறமை களை ஊக்குவிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்பட்டன. மாணவர்களின் ஒருங்கிணைப்பாளர் ராம்பிரகாஷ் நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை பேராசிரியர்கள் ரஸினாபேகம், சோபனா மற்றும் மக்கள் தொடர்பாளர் நஜீமுதீன் செய்திருந்தனர்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.