Tuesday, February 5, 2013

நாளை (பிப் 6) துபாயில் நினைவு இரங்கல் கூட்டம்!உஸ்வதுன் ஹஸனா முஸ்லிம் சங்கம் ஏற்பாடு!

உஸ்வதுன் ஹஸனா முஸ்லிம் சங்கம், துபை சார்பாக வெளியிட்டுள்ள‌ செய்தி குறிப்பில்..


உஸ்வதுன் ஹஸனா முஸ்லிம் சங்கம், துபை சார்பாக கீழக்கரை முன்னாள் சேர்மனும், மிகச் சிறந்த சன்மார்க்க அறிஞருமான மறைந்த K.S.M. ஷாஹூல் ஹமீத் ஹாஜியார் ஆலிம் ஜ‌மாலி அவர்களின் நினைவாக இரங்கல் கூட்டம் இன்ஷா அல்லாஹ் வரும் பிப்ரவரி 6 புதன் கிழமை மாலை சரியாக 7.00 மணியளவில் ETA D பிளாக், ( முத்தீனா பின்புறம், தேரா) துபையில் நடைபெற உள்ளது.

அவர்கள் நமதூருக்கும், நம் சமுதாயத்திற்கும் ஆற்றியுள்ள சேவைகளைப் போற்றும் வகையில், உஸ்வதுன் ஹஸனா முஸ்லிம் சங்கம் நடத்தும் இவ்விரங்கல் கூட்டத்தில், நம் ஊர் மக்கள் அனைவரும் பெருந்திரளாகக் கலந்து கொள்ளுமாறு, அஹ்மது ஸாதிக் காக்கா, அப்துல் ஒஃபூர், மற்றும் முஹம்மது மஹ்ரூஃப் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.