Wednesday, February 20, 2013

முதலில் விசில் சத்தம் பிற‌கு குப்பை அக‌ற்றி சுத்த‌ம்!


கீழ‌க்க‌ரை தெருக்க‌ளில் உள்ள‌ வீடுக‌ளில்  சேரும் குப்பைகளை அகற்ற கீழக்கரை தொண்டு நிறுவனம் புதிய உத்தியை கையாண்டு வருகிறது. தொண்டு நிறுவன பணியாளர் விசிலை ஊதியபடி முதலில் தெருவுக்குள் வருவார். விசில் சத்தம் கேட்டதும், வீடுகளில் உள்ள குப்பைகளை பெண்கள் வெளியே கொண்டு வந்து தருகிறார்கள். இதனால், வீதிகளில் குப்பை போடுவ‌து த‌விர்க்க‌ப்ப‌ட்டு டிர‌க் மூல‌ம் அகற்றப்படுகிறது. குப்பைக‌ள் அக‌ற்ற‌ப்ப‌டுவ‌து ப‌ல‌ ஆண்டுகளாக‌ வெல்பேர் தொண்டு நிறுவ‌ன‌ம் மூல‌ம் ந‌டைபெறுகிற‌து.

கீழக்கரை நகராட்சியில் தினமும் சுமார் 15 டன்னுக்கு மேல் குப்பைகள் குவிகின்றன. குப்பைகளை அகற்றும் பணியில் ஒருபுறம் நகராட்சியும், மறுபுறம் கீழக்கரை வெல்பர் அசோசியேஷன் என்ற தொண்டு நிறுவனமும் களமிறங்கி செயல்படுகின்றன. தங்களது துப்புரவு பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று குப்பைகளை பெற்று வாகனம் மூலம் குப்பை கிடங்குக்கு எடுத்து செல்கின்றனர். தொண்டு நிறுவனம் சார்பில், இந்தப்பணி நீண்டகாலமாக செய்யப்பட்டு வருகிறது.

இதன் பணியாளர்கள், வீடுகளுக்கு செல்வதற்கு முன்பாக தெருக்களில் விசில் அடித்தபடியே செல்வார்கள். விசில் சத்தத்தை கேட்டதும், வீடுகளில் உள்ள பெண்கள், தங்கள் வீட்டு குப்பை கூடைகளை வீட்டு வாசலில் வைத்து விடுவார்கள். தொண்டு நிறுவன பணியாளர் வீடுகளின் வாசலில் வைக்கப்பட்ட குப்பைகளை அகற்றிய படியே செல்வார்.
.
கீழக்கரை வெல்பர் அசோசியேஷன் மேலாளர் அஜீஸ் கூறுகையில்,

“நகரில் சேரும் குப்பைகளில் மூன்றில் ஒரு பகுதி குப்பைகளை எங்கள் தொண்டு நிறுவனம் எவ்வித லாப நோக்கமின்றி அகற்றி வருகிறது. இதற்காக 4 டிராக்டர், 4 ஓட்டுனர்கள் மற்றும் 23 பணியாளர்கள் எங்கள் தொண்டு நிறுவனத்தில் பணி செய்து வருகின்றனர். இதற்காக மாதந்தோறும் சுமார் 4 லட்சம் ரூபாய் செலவு செய்யப்படுகிறது. மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று குப்பைகள் பிரிக்கப்பட்டு அகற்றப்படுகிறது

1 comment:

  1. மங்காத்தாவின் தங்கச்சி மகன்February 21, 2013 at 7:06 PM

    மறு பதிப்பு

    மங்காத்தாவின் தங்கச்சி மகன்9 October 2012 5:22 pm keelakaraitimes

    சிறப்பாக செயல் பட்ட கீழக்கரை வெல்பேர் அஷோஷியேஷன் மர்ஹூம் ஜனாப்.லியாகத் அலி மறைவுக்கு பின் ஏறபட்ட நிர்வாக மாற்றத்திற்கு பின் அதன் பணியில் தொய்வு காணபபடுவது போல தென்படுகிறது..

    முதலில் புதிய நிர்வாகத்தினர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட விசில் சத்தம் பொது மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.. துப்பரவு பணியாளர்கள் குப்பைகளை எடுக்க வீடு நாடி வரும் போது அவர்கள் எழுப்பும் விசில் சத்த ஒலியால் பொது மக்கள் எச்சரிக்கை செய்யப்பட்டு.காலத் தாமதம் தவிர்க்கப் படுகிறது..மேலும் வீட்டின் உடபுறத்தில் இருந்தாலும் விசில் ஒலியால் நினைவுட்டப் படுகிறார்கள்..நல்லதொரு பராட்டுக்குரிய செயல்பாடு..

    பாச மனைவி, ஆசை மக்களை,பெற்று வளர்த்து ஆளாகிய தியாக பெற்றோர்களை,சகோதர சகோதரிகளை உற்றார் உறவுகளை,தோள் கொடுப்பான் தோழர்களை பிரிந்து கடல் கடந்து , ஆசாபாசங்களை துறந்து இயந்திர மனிதனாக அரபு, அமீரக நாடுகளில் வாழும் நமது நகர் உடன் பிறவா சகோதரர்களிடம் மாதா மாதம் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் நிதியினாலும், இ.டி.எ - அஸ்கான் - ஸ்டார் குழுமங்களின் மேலாண்மை தலைவர் பாசத்துகுரிய சாலாவுதீன் காக்கா அவர்களின் தீவிர ஆதரவு மற்றும் சளையாத ஆலோசனையின் பயனாக கீழக்கரை வெல்பேர் அஷோஸியேஷன் கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக நகரின் சுகாதார சீர்கேட்டை முடிந்த அளவு சீர் செய்து வருகிறது என்பதை யாராலும் மறைக்கவோ மறக்கவோ முடியாது..


    Reply

    மங்காத்தாவின் தங்கச்சி மகன்9 October 2012 6:16 pm keelakaraitimes


    கடந்த ஆராண்டு காலத்திற்கு மேலாக குப்பைகரையாக மாறிய கீழக்கரையில் வெல்பேரின் சேவை மட்டும் இல்லாதிருந்தால் நகரின் சுகாதார நிலைமையை எண்ணிப் பார்க்கக் கூட நமது மூளைகளுக்கு திராணி என்பது திண்ணமாக அறவே இருக்க முடியாது. சுகாதார சீர்கேட்டின் காரணமாக பூத்து குலுங்க வேண்டிய சில பிஞ்சுகளை இழந்தோம்.

    அந்த ஆதஙகத்தில் தான் மனம் அழுது இதை பதிவு செய்கிறேன்... வெல்பேர் சேவையில் தொய்வு மட்டுமல்ல முன்னை விட இன்னும் சிறப்பாக முனைப்புடன் செயல் பட வேண்டும் என பொது மக்கள் ஏக்கத்துடன் எதிர்பார்த்திருக்கிறார்கள்..உங்கள் சேவை அவ்வளவு மகத்தானது.. சீரிய சிறப்புடையது.

    நகரில் பெரும்பாலான பொது மக்கள் அசைவ உணவுக் காரர்கள். ஆகவே வீட்டில் சேரும் மீன்,இறைச்சி மற்றும் சில மணி கூறுகளில் நாற்றமெடுக்கும் கழிவுகளை ஒரு நாளைக்கு மேல் பாதுகாக்க முடியாது. சமீப காலத்தில் வெல்பேர் துப்பரவு பணியாளர்கள் இரண்டு நாட்களுக்கு மேல் வராமல் இருக்கிறார்கள், குறிப்பாக இடி சந்துகளில் உள்ள வீடு களுக்கு..காரணம் புரியவில்லை. அச்சமாக இருக்கிறது.. எனென்றால் இந்த குறைபாடு பொது மக்களை நடு இரவில் நாற்றமெடுத்த கழிவு குப்பைகளை நடு வீதியில் வீசக்கூடிய சூழ்நிலையை உருவாக்கக்கூடிய வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கும்.. தேவையா?? பின்னர் பொது மக்களை நோவதில் யாது பயன்??

    நல்லதையே நினைப்போம். நல்லதே நடக்கும் என நம்புவோம். நம்பிக்கை தானே வாழவின் ஆதாரம்..

    மேலும் துப்பரவு பணி மேற்பார்வையாளார்களின் அலைபேசி எண்ணையும் பரவலாக அறியப்பட வைக்க வேண்டும். அப்போது தான் குறை உள்ளவர்கள் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம்..

    வாழக நலமுடன், நாங்களும் நீங்களுமாக..

    Reply

    மங்காத்தாவின் தங்கச்சி மகன்9 October 2012 6:31 pm keelakaraitimes

    சங்கை மிகு குர்ஆனின் அறிவிப்பு:

    அசுத்தங்களை வெறுத்து விடுங்கள். அத்தியாயம் 74 அல் முத்தஸ்ஸிர் (போர்த்திக் கொண்டவர்) வசனம் 5

    உங்கள் இறைவனின்ன் கட்டளையை நிறைவேற்றுவதற்காக (க் கஷ்டங்களை)நீங்கள பொறுத்திருங்கள் வசனம் 7
    ************************************************
    ஜனாப் அஜீஸ் அவர்களே தங்கள் தலைமையின் கீழ் இப்போது கீ.வெ.அ. சேவை சீரிய முறையில் பேம்பட்டுள்ளது. ஊர் மக்களின் இதயம் கனிந்த நல் வாழ்த்துகள் உரித்தாகுக
    ************************************************

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.