Thursday, February 21, 2013

கீழ‌க்க‌ரை மெயின் ரோட்டில் சாலையோர‌ ஆக்கிர‌மிப்பு அக‌ற்ற‌ம்!


கீழ‌க்க‌ரை வ‌ள்ள‌ல் சீத‌க்காதி சாலையில் "பாம்பே ஆன‌ந்த‌ ப‌வ‌ன்" க‌டை அருகில் உள்ள‌ ஓட்ட‌லில் க‌ழிவு நீர் பைப்பில் அடைப்பு ஏற்ப‌ட்டு க‌ழிவுநீர் சாலையில் ஆறாக‌ ஓடிய‌து.

த‌க‌வ‌ல் அறிந்த‌ ந‌க‌ராட்சி நிர்வாக‌ம் சுகாதார‌த்துறை ஆய்வாள‌ர் திண்ணாயிர‌மூர்த்தி த‌லைமையில் ப‌ணியாள‌ர்க‌ளுட‌ன் அங்கு வ‌ந்து க‌ழிவு நீர் பைப்பில் ஏற்ப‌ட்ட‌ அடைப்புக‌ளை அக‌ற்றி க‌ழிவுநீர் சாலையில் ஓடாமல் சீர் செய்த‌தோடு அங்குள்ள‌ க‌டைக‌ளால் சாலையை ஆக்கிர‌மிப்பு செய்து வைக்க‌ப்ப‌ட்டிருந்த‌ பொருள்க‌ளை அக‌ற்றின‌ர்.

மேலும் ந‌க‌ராட்சி அலுவ‌ல‌ர்க‌ள் அப்ப‌குதியில் உள்ள‌ ஓட்ட‌ல்க‌ளில் சுகாதாராத்தை பேணுமாறும் இல்லையென்றால் க‌டும் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ப்ப‌டும் என‌ எச்சரித்து சென்ற‌ன‌ர்.



நக‌ராட்சி க‌வுன்சில‌ர்க‌ள் ஹாஜா ந‌ஜிமுதீன்,முகைதீன் இப்ராகிம்,பாவா‌ உள்ளிட்ட‌ ஏராள‌மானோர் அங்கு குவிந்த‌ன‌ர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.