Friday, February 22, 2013

கீழ‌க்க‌ரை ந‌கை க‌டையில் த‌ங்க‌ம் ம‌ற்றும் வெள்ளி திருட்டு!

கீழக்கரை இந்து பஜாரில் கோபால் நகைக்கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு கடையை அடைத்து விட்டு சென்றார். நேற்று காலை கடை திறக்க வந்த போது கதவில் பூட்டுகள் திறந்திருந்தன.

கடையில் இருந்த 24 கிராம் பவுன், 720 கிராம் வெள்ளியை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். முதுகுளத்தூர் கூடுதல் எஸ்.பி., விக்ரமன் பார்வையிட்டார்.கோபால் புகார்படி, கீழக்கரை எஸ்.ஐ., செல்லமணி வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.


 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.