Monday, February 25, 2013

கீழக்கரை கைராத்துல் ஜலாலியா பள்ளியில் 32ம் ஆண்டு விழா!

ப‌ழைய ப‌ட‌ம்

க‌ட‌ந்த‌‌ வார‌ம் கீழக்கரை கிழக்குத்தெரு கைராத்துல் ஜலாலியா மேல்நிலைப்பள்ளியின் 32ம் விளையாட்டு மற்றும் ஆண்டுவிழா நடைபெற்றது, தொடக்கப்பள்ளி தாளாளர் செய்யது இபுராகிம் தலைமை வகித்தார். மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முகம்மது மீரா வரவேற்றார்.

கிழக்குத்தெரு முஸ்லீம் ஜமாஅத் செயலாளர் நெஹ்ரு சிகாபு மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். தேசியக் கொடியை கல்விக்குழு உறுப்பினர் செய்யது சகுபரும்,
ஒலிம்பிக் கொடியை துணை பொருளாளர் முகம்மது அஜ்ஹரும், பள்ளிக்கொடியை பொருளாளர் அப்துல் மத்தீனும், ஒலிபிக் தீபத்தை கல்விக்குழு உறுப்பினர் ஹூசைன் அப்துல் காதரும் ஏற்றினர். விளையாட்டு போட்டிகளை கல்விக் குழு உறுப்பினர் சமீம் அகமது தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து மாலையில் நடைபெற்ற ஆண்டு விழாவிற்கு முகைதீன் அப்துல்காதர் தலைமை வகித்தார். ஜமாஅத் தலைவர், செயலாளர், நிர்வாகிகள் கல்விக்குழு உறுப்பினர்கள் மற்றும் செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் அபுல்ஹசன் சாதலி முன்னிலை வகித்தனர்.மேல்நிலைப்பள்ளி தாளாளர் பேராசிரியர் சாதிக் வரவேற்றார்.
அரசு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பொற்கிழி வழங்கப்பட்டது, ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகளை நிஜாமுதீன் வழங்கினார். உதவி தலைமை ஆசிரியர் சாகுல் ஹமீது நன்றி கூறினார்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.