Saturday, February 4, 2012

விழிப்புணர்வு! பைக் ம‌ற்றும் ஆட்டோவில் கவுன்சிலர் தலைமையில் இளைஞர்கள் ஊர்வலம் !



கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 40 மைக்ரோன் அடர்த்திக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பை மற்றும் கப்கள் உபயோகத்திற்கு பிப்2 முதல் நகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இது குறித்து பொது ம‌க்க‌ளுக்கு விழிப்புண‌ர்வு ஏற்ப‌டுத்தும் வ‌கையில் 12வ‌து வார்டு க‌வுன்சில‌ர் சித்தீக் த‌லைமையில் 13 ம‌ற்று 14வ‌து வார்டு க‌வுன்சில‌ர்க‌ள் ர‌பியுதீன் தாஜீன் அலிமா ஆகியோர் பிளாஸ்டிக் உப‌யோகிப்ப‌தால் ஏற்ப‌டும் தீங்குக‌ள் குறித்து பிட் நோட்டீஸ் அச்ச‌டித்து இளைஞ‌ர்க‌ளுட‌ன் டூவீல‌ர் ம‌ற்றும் ஆட்டோக்க‌ளில் தெருதெருவாக‌ ஊர்வ‌ல‌மாக‌ சென்று வீடுக‌ள் ம‌ற்றும் க‌டைக‌ளுக்கு பிட் நோட்டீஸ் வ‌ழ‌ங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வ‌ருகின்ற‌னர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.