Saturday, February 18, 2012

கீழக்கரையில் சட்டவிரோதமாக‌ மது விற்ற இருவர் கைது !


இன்ஸ்பெக்டர் இளங்கோவன்

கீழக்கரை சுடுகாட்டில் காலை மற்றும் இரவுநேரங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக நீண்ட கால குற்றச்சாட்டு நிலவி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கீழக்கரை இன்ஸ்பெக்டர் இளங்கோவனுக்கு கிடைத்த தகவலையடுத்து அவர் உத்தரவின் பேரில் எஸ்.ஐ.கார்மேகம் தலைமையில் போலீசார் சுடுகாட்டில் திடீர் சோதனை செய்ததில் கருப்பையா மகன் ராஜிவ் காந்தி(24),முனியான்டி மகன் குமார்(31) ஆகிய இரண்டு சுடுகாட்டின் அருகே மது விற்றதை தொடர்ந்து இருவரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். 8மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.