Monday, February 6, 2012

கீழக்கரை கல்லூரிகள் இணைந்து நடத்திய மீலாது விழா !








கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி ,முகம்மது சதக் பொறியியல் கல்லூரி,செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி,முகம்மது சதக் ஐ.டி.ஐ ,செய்யது ஹமீதா அரபிக் கல்லூரி,முகம்மது சதக் தஸ்தகீர் மெட்ரிகுலேசன் பள்ளி ஆகியவை நடத்திய மீலாது விழா பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.


இவ்விழாவிற்கு முகம்மது சதக் அறக்கட்டளை தலைவர் ஹமீது அப்துல் காதர் தலைமை தாங்கினார்.பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன் வரவேற்றார்.


கல்லூரி தாளாளர் யூசுப் சாகிப்,இயக்குநர் ஹபீப் முகம்மது சதக்கத்துல்லா,முன்னிலை வகித்தனர். தொழில் வர்த்தக சங்க தலைவர் அன்வர்தீன்,யூசுப் சுலைகா மருத்துவமனை இயக்குநர் செய்யது அப்துல் காதர்,கீழக்கரை டவுன் காஜி காதர் பக்ஸ், முகம்மது சதக் பொறியியல் கல்லூரி முதல்வர் முகம்மது ஜகாபர் உள்பட பலர் கலந்து கொண்டனர். கோவை கரும்புகடை ஜீம்மாப்பள்ளி இமாம் அப்துல் அஜீஸ் நபிகளாரின் எளிமையான வாழ்க்கை குறித்து விரிவாக எடுத்து கூறினார்.


மேலும் நிகழ்ச்சியில் சமூக நல இயக்க அமானுல்லா,செயலாளர் தங்கம் ராதாகிருஸ்ணன் உள்ளிட்ட பலர் பங்கு பெற்றனர்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.