Tuesday, February 21, 2012

கீழக்கரை கல்லூரியில் 250க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் !


படவிளக்கம் :-கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பில் முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற ரத்ததான முகாமில் ரோட்டரி சங்க உறுப்பினர் ஆசாத் ரத்ததானம் செய்தார்

கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் ரோட்டரி சங்கம் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் உள்பட 250க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர்

கல்லூரி முதல்வர் அலாவுதீன் தலைமை வகித்தார்.ரோட்டரி சங்க மாவட்ட துணை ஆளுநர் தினேஷ் பாபு முகாமை துவங்கி வைத்தார். கீழக்கரை ரோட்டரி சங்க செயலாளர் சுப்பிரமணியன்,முன்னாள் செயலாளர் பால சிப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் ஆலோசகர் மரியதாஸ் வரவேற்றார்.இம்முகாமில் மதுரை மீனாட்சி மிஷன் டாக்டர் ரவி தலைமையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் 20பேர் கொண்ட குழு கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.