Wednesday, February 22, 2012

கீழக்கரை அருகே நூற்றுக்கணக்கானோர் திரண்ட மீன்பிடி திருவிழா !




கீழக்கரை அருகே திருப்புல்லாணி கொட்டங்குடி ஆற்றில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இப்பகுதியில் வருடந்தோறும் மீன்பிடி திருவிழா நடைபெறும் நேற்று காலையில் தொடங்கிய இவ்விழாவில் ஒன்றியத்தின் பல கிராமங்களிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு விலாங்கு ,கெழுத்தி,இரால் போன்ற வகை சிறிய வகை மீன்களை பிடித்து தங்கள் வீடுகளுக்கு எடுத்து சென்றனர். கொட்டங்குடி ஆற்றில் தொடங்கி கீழக்கரை அருகே தோணிப்பாலம் வரை மீன்களை பிடித்தனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.