Friday, February 10, 2012

சதக் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு செல்போன் தொடர்பான‌ பயிற்சி !





கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில் முனைவோர் மேம்பாடு மையம் மற்றும் வேலை வாய்ப்பு பிரிவு சார்பாக மின்னனுவியல் மற்றும் தொடர்பியல் துறை இறுதியாண்டு மாணவ ,மாணவிகளுக்கு மூன்று நாள் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி முகாம் கல்லூரி புதிய கருத்தரங்கு கூட்டத்தில் நடைபெற்றது.


இதில் கல்லூரி முதல்வர் அலாவுதீன் தலைமை தாங்கி முகாமை துவக்கி வைத்தார்.தொழில் முனைவோர் மேம்பாட்டு மையத்தின் ஒருங்கினைப்பாளர் சேக் தாவுத் வரவேற்றார். மேலும் செல்போன் ட்ரைய்னர் மரியதாஸ் செல்போன் கையாளுமுறை,செல்போன் சர்விஸ் முறை,செய்முறை போன்ற பயிற்சிகளை மாணவர்களுக்கு நடத்தினார்.இதில் 60க்கும் மேற்பட்ட இறுதியாண்டு மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சேக் தாவுத் செய்திருந்தார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.