Saturday, February 4, 2012

கீழக்கரையில் சுழற்சி முறையில் மின்சார தடை !முதல்வர் ஜெயலலிதாவுக்கு மனு !



கீழக்கரை நுகர்வோர் பாதுகாப்பு கழக பொருளாளர் முகம்மது இப்ராகிம் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ள மனுவில்,
கீழக்கரையில் சென்ற ஜனவரி மாதம் பகல் 2 மணி முதல் 4 மணி வரை மின் தடை செய்யப்பட்டது அதன் படி இந்த மாதம் மாலை 4 மணி முதம் 6 மணி வரை சுழற்சி முறையில் மின் தடை செய்யப்பட வேண்டும் .

ஆனால் இந்த மாதமும் மீண்டும் பகல் 2 மணி முதல் 4 மணி வரை மின் தடை ஏற்படுத்தப்படுகிறது. இதனால் கடந்த 2ந்தி தொடங்கிய‌ பிளஸ் 2 பொது தேர்வில் ஒரு பகுதியான‌ செயல்முறை தேர்வு எழுதும் மாணவர்கள் மிகுந்த சிமத்துக்குள்ளாகிறார்கள்.

தேர்வின் போது மின் தடை ஏற்படுவதால் மாணவ,மாணவியரின் எதிர்கால கல்வியை பாதிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே சமந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சுழற்சி முறையில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை மின் தடை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


இது குறித்து கீழ‌க்க‌ரையை சேர்ந்த‌ சாதிக் கூறுகையில், பெய‌ர‌ள‌வில் தான் 2 ம‌ணி நேர‌ மின் த‌டை ஆனால் ப‌ல‌ மணி நேர‌ம் மின்சார‌ம் த‌டை செய்ய‌ப்ப‌டுகிற‌து.எனவே இது குறித்தும் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும் என்றார்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.