Thursday, February 9, 2012

கீழக்கரையில் 10 மணி நேரம் மின்சார தடை !பொது மக்கள் கடும் எதிர்ப்பு !



தமிழக‌ம் முழுவதும் பல மணி நேரத்திற்க்கும் மின்சார தடை நீடித்து வருகிறது. இநிலையில் கீழக்கரையில் அதிகமாக கடந்த சில நாட்களாக 10 மணி நேரம் மின் தடை ஏற்படுத்தப்படுகிறது. இரவில் நான்கு மணி நேரம் ,காலை ,பகல் நேரங்களில் 6 மணி நேரம் என்று 10 மணி நேரம் மின் தடை உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வ‌ருகின்ற‌ன‌ர்.இது குறித்து பொதுமக்கள் கடும் எதிர்பையும்,கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.


இது குறித்து ர‌ஹ்மான் என்பவ‌ர் கூறுகையில்,


மாண‌வ‌ர்க‌ளுக்கு பொது தேர்வுக‌ள் நெருக்க‌த்தில் இது போன்ற‌ மின்த‌டை மிக‌வும் க‌ண்டிக்கத்த‌க்க‌து.
மேலும் பல‌ வீடுகளில் யுபிஎஸ் சாதனம் ,கேஸ் மூலம் இயங்கும் சாதனங்கள் ,பேட்டரி விளக்குகள் போன்றவற்றை பயன்படுத்தி மின் வெட்டை சமாளித்து வருகிறார்க‌ள்.மேலும் தற்போது மின்சாரம் சேமிக்கும் யுபிஎஸ் போன்ற‌ சாத‌ன‌ங்க‌ளை ‌ ரூ20000 முத‌ல் ரூ25000 வ‌ரை விற்கிறார்க‌ள்.எத்தனை பேர் இவ்வளவு விலை கொடுத்து வாங்கமுடியும். குறைந்த பட்சம் மின் இலாகா இர‌வு நேர‌ங்க‌ளில் மின் வெட்டை த‌விர்க்க‌ வேண்டும்.இது தொட‌ர்ந்தால் வீதிக்கு வ‌ந்து ம‌க்க‌ள் போராடுவார்க‌ள் என்ப‌து நிச்ச‌ய‌ம் என்றார்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.