Thursday, February 23, 2012

கீழக்கரையில் அரபி மொழி கருத்தரங்கம் !


கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரபித்துறை மற்றும் ஹமீதா அரபிக் கல்லூரியின் சார்பாக மாநில அளவிலான அரபி மொழி கருத்தரங்கம் கல்லூரி முதல்வர் அபுல் ஹசன் சாதலி தலைமையில் நடைபெற்றது.

முகம்மது சதக் அறக்கட்டளை தலைவர் ஹமீது அப்துல் காதர் ,தாளாளர் யூசுப் சாகிப் முன்னிலை வகித்தனர். அரபி துறை தலைவர் அபுதாஹிர் வரவேற்றார்.

இதில் சென்னை பல்கலைகழக முன்னாள் அரபித்துறை தலைவர் நிசார் அகமது,சென்னை புதுக்கல்லூரி அரபித்துறை தலைவர் அப்துல் மாலிக் ,முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன்,மதுறை வக்பு வாரிய கல்லூரி ஆசிரியர் சேக் முகம்மது,திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி பேராசிரியர் அப்துல் காதர்,சென்னை புது கல்லூரி ஆசிரியர் ஹாஜா முகைதீன் மற்றும் தாசிம்பீவி அப்துல் காதார் கல்லூரி ஆசிரியர்கள் சாபிரா,நூர்ஜஹான், ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
செய்யது ஹமீதா அரபிக்கல்லூரி முதல்வர் அப்துல் நாசர் ஜமாலி நன்றி கூறினார்.இந்நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ ,மாணவியர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.