Saturday, February 25, 2012

நிமிர்ந்து நின்றால் எரிமலையும் வழிகொடுக்கும் !தாசிம் பீவி கல்லூரி விழாவில் எஸ்.பி.காளிராஜ் .பேச்சு!



கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் கல்லூரி மகளிர் கல்லூரி 24வது ஆண்டு விழா சீதக்காதி அறக்கட்டளை செயலாளர் காலித் புஹாரி தலைமையில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் சுமையா வரவேற்று ஆண்டறிக்கை சமப்பித்தார்.கல்லூரி தாளாளர் ரஹ்மத் நிஷா அப்துல் ரஹ்மான்,சீதக்காதி அறக்கட்டளை பெண்கள் கல்வி நிறுவனங்களின் இயக்குநர் ஷரிபா அஜீஸ் முன்னிலை வகித்தனர்.
சீதக்காதி அறக்கட்டளை உறுப்பினர்கள் ஆயிஷா,சாதிகா காலித்,யூசுப் சுலைகா மருத்துவமனை இயக்குநர் டாக்டர் செய்யது அப்துல் காதர்,இருதய அறுவை சிகிச்சை நிபுணர் செய்யது அகமது(யுஎஸ் ஏ) மாவட்ட எஸ்.பி காளிராஜ் மகேஷ்குமார்,காரைக்குடி அழகப்பா யுனிவர்சிட்டி மாணிக்க வாசகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாவட்ட எஸ்.பி காள்ராஜ் மகேஷ்குமார் பேச்சின் ஒரு பகுதி ,
உறங்கி கிடந்தால் சிலந்தி வலையும் சிறை பிடிக்கும்,நிமிர்ந்து நின்றால் எரிமலையும் வழி கொடுக்கும்,இரண்டு கைகள் இல்லை என்றாலும் தன்னம்பிக்'கை' யை வைத்து குறிகோளுடன் செயல்பட்டால் வெற்றி பெறலாம். ஆகவே மாணவிகளாகிய் நீங்கள் முயற்சி செய்து படித்து முன்னேற வேண்டும் என்றார்.

விழாவிற்கான ஏற்பாடுகளை சீதக்காதி அறக்கட்டளை கீழக்கரை துணை பொது மேலாளர் சேக் தாவூத்,கல்லூரி மேலாளர் முகம்மது அஜீஸ் ,துணை முதல்வர் நாதிர பானு கமால் ஆகியோர் செய்திருந்தனர்.மாணவி ஹீசைனியா நன்றி கூறினார்.

1 comment:

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.