Monday, February 20, 2012

முகம்மது சதக் கல்லூரியில் பசுமை கட்டிட கலை கருத்தரங்க நிறைவு விழா !






முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் பசுமை கட்டிட கலை கருத்தரங்கம் நிறைவு விழா முகம்மது சதக் அறக்கட்டளை தலைவர் ஹமீது அப்துல் காதர் தலைமையில் நடைபெற்றது.



கனி ரஹ்மான் கிராஅத் ஓதி விழாவினை துவங்கி வைத்தார்.கல்லூரி செயலாளர் யூசுப் சாகிப் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் முகம்மது ஜகாபர் ,கல்லூரி முதல்வர் முகம்மது ஜகாபர்,சென்னை புது கல்லூரி சுல்தான் அகமது இஸ்மாயில்,கட்டட கலை ஆலோசகர் ஹாரிஸ்,முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன்,துறை தலைவர் செல்வ பிரியா ,விஓசி கல்லூரி முதல்வர் தாமோதரன்,உள்கட்டமைப்பு துறை தலைவர் அப்துல் சமது உள்ளிட்ட பலர் பேசினர்



இவ்விழாவில் கட்டட மாதிரி வடிவமைப்பு கட்டுரை சமர்பித்தலில் முதல் மற்றும் இரண்டாம் பரிசுகளை தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலை கழக் கல்லூரி மாணவிகள் பெற்றனர்.மூன்றாம் பரிசை மதுரை தியாகராயர் கல்லூரி பெற்றது. இறுதியாண்டு ஆராய்ச்சி கட்டுரையில் முதல் பரிசை சென்னை மியாசி அகாடமி கல்லூரி பெற்றது. இரண்டாம் பரிசை சென்னை சத்திய பாமா கல்லூரி பெற்றது. மூன்றாம் பரிசை பெரியார் மணியம்மை பல்கலை கழக கல்லூரி பெற்றது. நிகழ்ச்சியின் நிறைவில் ரவீந்தர் நன்றி கூறினார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நஜிமுதீன் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.