Friday, February 10, 2012

கீழக்கரையில் காவேரி குடிநீரில் கழிவுநீர் கலந்து வரும் அவலம் !



கீழக்கரை நகராட்சி மூலம் வினியோகம் செய்யப்படும் குடிநீரில் சாக்கடை கலந்து வருவதால் பொது மக்கள் பயன்படுத்த முடியாமல் கடும் அவதியடைந்து வருகிறார்கள்.இதனால் பல வருடங்களாக தனியார்களின் மூலம் சப்ளை செய்யப்படும் குடிநீரை விலைக்கு வாங்கும் அவல நிலை இன்றும் தொடர்கிறது. ஒரு குடம் ரூ 5க்கு விற்கப்படுகிறது.


இது குறித்து 21வது வார்டு ஜெயபிராகஷ் கூறுகையில் , ராமநாதபுரம் மாவட்டத்திற்க்கு கடந்த ஆட்சியில் பல கோடி ரூபாய் செலவில் காவேரி கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது.அதை கீழக்கரை மக்கள் பயன் படுத்த முடியாத சூழ் நிலை உள்ளது. என்றார் .

இது குறித்து அவர் நகராட்சி கமிஷனரிடம் கொடுத்துள்ள மனுவில் , கீழக்கரையில் 39 வருடங்களுக்கு முன் புதைக்கப்பட்ட குடிநீர் பைப்புகள் தற்போது பழுதடைந்து விட்டதால் அரசின் குடிநீருடன் கழிவு நீரும் கலந்து வருகிறது.எனவே உடனடியாக நடவடிக்கை எடுத்து புதிய பைப்புகளை பதிக்க வேண்டும்.

இதே போல் கீழக்கரையில் செயல்பட்டு வரும் செந்தமிழ்,அன்பு,தோழிகள்,ரோஜா வனம் உள்ளிட்ட மகளிர் அமைப்புகளும் மனு கொடுத்துள்ளன.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.