Tuesday, February 7, 2012

இளைஞ‌ர் மீது தாக்குதல்! பெரியபட்டிணத்தில் பஸ் சிறை பிடிப்பு




ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டிணத்தில் அரசு பஸ் பொதுமக்களால் சிறை பிடிக்கப்பட்டது.

ராமநாதபுரத்திலிருந்து பெரியபட்டிணம் செல்லும் அரசு பஸ்ஸில் பயணிகளுக்கிடையே ஏற்பட்ட தகராறில் பெரியபட்டிணத்தை சேர்ந்த இளைஞர் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இதன் காரணமாக பெரிய பட்டிணம் பஸ் நிலையத்தில் பொதுமக்களால் சிறைபிடிக்கப்பட்டது.


இதையறிந்த கீழக்கரை டிஎஸ்பி முனியப்பன் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் சமரசம் செய்து சம்பந்தப்பட்டவர்களிடம் தகராறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த பின்பே பஸ்சை விடுவித்தனர்.

1 comment:

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.