Thursday, February 9, 2012

கீழக்கரை நலனை பாதிக்கும் தலைவர் - துணை தலைவர் மோதல் போக்கு!


நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரிய

துணை தலைவர் ஹாஜா முகைதீன்
கீழக்கரை நகராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகியோருக்கிடையே அதிகரித்து வரும் மோதல் போக்கினால் கீழக்கரை நகரின் வளர்ச்சி பாதிக்கப்படும் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கீழக்கரை நலனை கருத்தில் கொண்டு இரு தரப்பும் இணைந்து செயல்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கீழக்கரையில் சுகாதாரம்,குடிநீர் உள்பட பல் வேறு மக்கள் பிரச்சனைகள் நீண்ட காலமாக‌ தீர்க்கபடாமல் உள்ளது இந்நிலையில் கீழக்கரை முழுவதும் உள்ள கழிவு நீர் கால்வாய்களை தூர் வாரி சுத்தப்படுத்தியது, கீழ‌க்க‌ரையில் க‌ட‌ற்க‌ரை பூங்கா அமைப்ப‌து,குப்பை கொட்டுவ‌த‌ற்கான‌ இடத்தில் சுற்று சுவர் கட்டுவது தொட‌ர்பாக‌ தில்லையேந்த‌ல் ப‌ஞ்சாய‌த்தாரிட‌ம் சுமூக‌ தீர்வு,வ‌ள்ள‌ல் சீத‌க்காதி சாலையை சீர‌மைப்ப‌து தொட‌ர்பாக‌ நெடுஞ்சாலைத்துறையை வ‌லியுறுத்தியது என தற்போதைய நகராட்சி நிர்வாகத்தின் பல்வேறு விரைவான நடவடிக்கைகள் கீழக்கரை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால் அனைவ‌ரையும் வேத‌னை ப‌ட‌ வைக்கும் அளவுக்கு த‌ற்போது நில‌வி வ‌ரும் த‌லைவர் ம‌ற்றும் துணை த‌லைவ‌ரின் மோத‌ல் போக்கு உள்ளது.

ம‌றைமுக‌மாக நிலவி வ‌ந்த‌ மோத‌ல் போக்கின் உச்ச கட்டமாக கடந்த ந‌க‌ராட்சி ம‌ன்ற‌ கூட்ட‌த்தில் வெளிப்ப‌டையாக‌ இரு த‌ர‌ப்பின‌ரும் வாக்கு வாத‌த்தில் ஈடுப‌ட்ட‌ன‌ர்.

இந்த ஒற்றிமையின்மை காரணமாக நகராட்சி கூட்டங்களில் திட்டங்களை அங்கீகரித்து தீர்மானங்கள் நிறைவேற்றுவ‌தில் சிரமம் ஏற்படும் இதன் காரணமாக கீழக்கரையில் பல்வேறு வளர்ச்சி பணிகள் பாதிக்கும் என்பதில் ஐயமில்லை.

தற்போது தமிழக அரசின் சார்பில் முதலமைச்சர் சிறப்பு நிதி ,தானே புயல் நிதி என்று சுமார் ரூபாய் 2.5 கோடி கீழக்கரை நகராட்சி நிர்வாகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இது போன்ற நிதியை கொண்டு கீழக்கரை நகர் மக்களுக்கு பயன் தரும் விதமாக செயல்படுத்த வேண்டும்.

கீழக்கரை நகராட்சி துணை தலைவர் ஹாஜா முகைதீனிடம் கேட்ட போது ,

பிரச்சனைக்கு காரணம் நகராட்சி நிர்வாகத்தில் நகராட்சி தலைவரின் கணவர் ரிஸ்வானின் தலையீடுதான் நிர்வாகத்தில் அவர் குறுக்கீடு இல்லாமல் நகராட்சி தலைவர் சுயமாக செயல்பட வேண்டும் என்றார்

இது குறித்து நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியவிடம் கேட்ட போது ,

கணவர் துணையுடன் நிகழ்ச்சிகளுக்கு செல்வதில் என்ன தவறு உள்ளது மேலும் எனது கணவர் நிர்வாகத்தில் தலையிடுவதில்லை.ஆனால் ஒரு சிலரின் தூண்டுதலின் பேரில் நகராட்சி துணை தலைவர் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார் இதை தவிர்க்க வேண்டும் என்றார்.

கீழக்கரை நலனை கருத்தில் கொண்டு இரு தரப்பும் ஒற்றுமையாக செயல்பட்டு கீழக்கரை நகரின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் விருப்பமாக உள்ளது.

2 comments:

  1. கணவர் துணையுடன் நிகழ்ச்சிகளுக்கு செல்வதில் என்ன தவறு உள்ளது??????????????

    ReplyDelete
  2. திண்ணை தோழன்February 13, 2012 at 4:29 PM

    நேற்று வரை சமையல் அறையில் இருந்த இந்த சகோதரிக்கு துணையாக தன் கணவரை அழைத்து செய்வதில் தப்பே இல்லை

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.