Monday, February 6, 2012

கீழக்கரை உள்ளிட்ட மன்னார் வளைகுடாவில் எரிபொருள் கண்டுபிடிப்பு!கல்லூரி நிகழ்ச்சியில் தகவல் !



கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான ஒரு நாள் கடல் சார் பயிற்சி பட்டறை கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

கடல் சார் துறை பல்கலைகழக தென் மண்டல இயக்குநர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய போது....

இந்திய கடலில் ஆழம் குறைவாக உள்ளதால் நீர் வழி போக்குவரத்து குறைவாக உள்ளது இருப்பினும் ஒரு ஆண்டுக்கு 1 பில்லியண் அளவு சரக்குகள் கொன்டு செல்லப்படுகிறது. மேலும் வரும் காலங்களில் பெட்ரோல்,டீசலை நம்பி இருக்க முடியாது.மும்பை,டில்லி போன்ற ந‌க‌ர‌ங்க‌ளில் வாக‌ன‌ங்க‌ளில் எரிபொருள்(க‌ம்ரேச‌ர் நேச்சுர‌ல் கேஸ்) கொண்டு இய‌க்க‌ப்ப‌டுகிற‌து. இந்தியாவில் 12 பெரிய‌ துறைமுக‌ங்க‌ளும்,215 சிறிய‌ துறைமுக‌ங்க‌ளும் உள்ள‌து.

மேலும் ம‌ன்னார் வ‌ளைகுடா க‌ட‌லில் ஹைட்ராய்டு என்ற‌ எரிபொருள் அதிக‌ அள‌வில் இருப்பதாக‌ ஆய்வில் க‌ண்டுபிடிக்க‌ப்ப‌ட்டுள்ளது.இதை கொண்டு வ‌ர‌ 6 கிலோ மீட்ட‌ர் ஆழ‌த்திற்கு குழாய்க‌ள் அமைத்து வெளியில் கொண்டு வ‌ர‌ வேண்டும். அப்ப‌டி வெளியே கொண்டு வ‌ந்தால் சுமார் 200 ஆண்டுக‌ளுக்கு தேவையான‌ எரிபொருள் கிடைக்க‌ வாய்ப்புள்ள‌து. இவ்வாறு பேசினார்.

நிக‌ழ்ச்சியில் முக‌ம்ம‌து ச‌த‌க் அற‌க்க‌ட்ட‌ளை த‌லைவ‌ர் ஹ‌மீது அப்துல் காத‌ர்,க‌ல்லூரி முத‌ல்வ‌ர் ஜ‌காப‌ர் வ‌ர‌வேற்றார்.க‌ல்லூரி இய‌க்குந‌ர்க‌ள் ,ச‌த‌க் பாலிடெக்னிக் முத‌ல்வ‌ர் அலாவுதீன்,க‌ட‌ல் சார்துறை த‌லைவ‌ர் மூர்த்தி,க‌ல்லூரி கட‌ல் சார் டீன் விஜ‌ய‌ ராக‌வ‌ன் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் க‌ல‌ந்துக்கொண்ட‌ன‌ர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.