Sunday, February 19, 2012

படித்த பள்ளயில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க்க‌ வாய்ப்பளித்தமைக்கு நன்றி ! நகராட்சி தலைவர் !




கீழக்கரை கிழக்குத்தெரு முஸ்லீம் ஜமாத் நிர்வாகத்தில் இயங்கும் கைராத்துல் ஜலாலியா மேல்நிலைப்பள்ளியில் 31ம் ஆண்டு விழா நடைபெற்றது.

இதில் மாணவர்கள் பங்கேற்ற பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.பள்ளி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா கலந்து கொண்டு அவ‌ர் பேசிய‌தில் ஒரு ப‌குதி,

பிளாஸ்டிக் தீமை குறித்து மாண‌வ‌ர்களாகிய நீங்களும் விழிப்புணர்வு ஏற்ப‌டுத்த‌ வேண்டும் மேலும் இப்ப‌ள்ளி சிற‌ப்பாக‌ செய‌ல்ப‌ட்டு வ‌ருகிற‌து.மாண‌வ‌ர்க‌ளாகிய‌ நீங்க‌ள் நன்றாக‌ ப‌டித்து பொது தேர்வுகளில் சிற‌ந்த‌ ம‌திப்பெண்க‌ள் பெற்று இந்த ப‌ள்ளிக்கும் ,ஜ‌மாத்திற்கும் ஆசிரிய‌ பெரும‌க்க‌ளுக்கும் பெருமையை தேடி த‌ரும்ப‌டி இந்த‌ ந‌ல்ல‌ த‌ருண‌த்தில் உங்க‌ளை கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அவ‌ர் பேசினார்

மேலும் அவ‌ர் கூறிய‌தாவ‌து,

இந்த கைராத்துல் ஜலாலியா ப‌ள்ளியில் தான் நானும் ப‌டித்தேன் என்ப‌து பெருமையாக‌ உள்ள‌து.நான் ப‌டித்த‌ ப‌ள்ளியிலேயே ந‌க‌ராட்சி த‌லைவ‌ராக‌ சிற‌ப்பு விருந்தின‌ராக‌ க‌ல‌ந்து கொள்வேன் என்று நினைத்து பார்க்க‌வில்லை.எல்லா புக‌ழும் இறைவனுக்கே .இந்த‌ வாய்பை கொடுத்த‌ என் ஊர் ம‌க்க‌ளுக்கும்,அழைத்த நிர்வாகத்தினருக்கு நன்றி தெரிவிப்பதோடு தொடர்ந்து மக்களுக்கான ந‌ல‌ப்ப‌ணிக‌ளை செய்து கொண்டிருப்பேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

இது குறித்து முன்னாள் மாணவர் ஆசிக் கூறுகையில் ,
இன்றைய‌ மாண‌வ‌,மாணவிக‌ள் நாளைய‌ த‌லைவ‌ர் என்ற‌ க‌ருத்து வ‌லுப்பெறும் வித‌மாக‌
தான் படித்த பள்ளியில் நகராட்சி தலைவராக விழாவில் பங்கு பெற்றது பொறுத்தமான நிகழ்வாகும்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.