Saturday, February 11, 2012

கீழ‌க்கரை வளர்ச்சிக்கு ரூ.2.50 கோடி ஒதுக்கீடு !ந‌க‌ராட்சி கூட்ட‌த்தில் தீர்மானம்!



பைல் ப‌ட‌ம் (பழைய படம்)


ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள‌ பணிகளை நிறைவேற்றுவதற்காக தீர்மானம், கீழக்கரை நகராட்சி அவசரக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.


கீழக்கரை நகராட்சி அவசர கூட்டம் தலைவர் ராபியத்துல் காதரியா தலைமையில் துணைத்தலைவர் ஹாஜா முகைதீன், கமிஷனர் முஜிபுர் ரஹ்மான், மேற்பார்வையாளர் மதுசூதனன் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் கிழக்கு மண்டலம், மேற்கு மண்டலம் பகுதிகளில் குடிநீர் குழாய் புதுப்பித்தல், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள உர கிடங்கிற்கு சுற்றுசுவர் கட்டுதல், உர கிடங்கிற்கு செல்லும் வழிகளில் சிமென்ட் சாலை அமைத்தல், புதிய 16 மீட்டர் உயர்மின் கோபுர விளக்கு அமைத்தல் மற்றும் வடக்குத்தெரு, சிஎஸ்ஐ சர்ச் முதல் பாபு கிளினிக் வரையும், வள்ளல் சீதக்காதி சாலை மற்றும் கிழக்குத்தெரு ரோடு பகுதிகளில் மழைநீர் வடிகால் கட்டுதல் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

1 comment:

  1. இந்த தீர்மானமாவது ஒரு மனதாக நிறைவேறியதா இல்லை கருது வேறுபாடு இருந்ததா?

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.