Friday, February 17, 2012

கடல் அட்டை தடையை நீக்க கீழக்கரை மீனவர் சங்கம் கோரிக்கை! ஜவாஹிருல்லா.எம்.எல்.ஏ கவனிப்பாரா ?


(பைல் படம் )


கீழக்கரை சிறுதொழில் மீனவர்கள் சங்கத்தின் தலைவர் முகம்மது அலியார் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு சங்கத்திற்கு செயலாளர் அட்டப்பா நல்ல இப்ராகிம் முன்னிலை வகித்தார். இதில் கடல் அட்டை தடையை நீக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு கடிதம் அனுப்புவதென்று முடிவு செய்யப்பட்டது.

அம்மனுவில் கூறியிருப்பதாவது, கடல் அட்டைகள் எளிதில் அழியக்கூடிய இனம் அல்ல என ஜெனிவா சர்வதேச ஆய்வு மையம் கூறுகிறது.ஒரு கடல் பெண் அட்டை 6 மாதத்திற்கு 10 லட்சம் குஞ்சுகள் வீதம் வருடத்திற்கு 20 லட்சம் குஞ்சுகள் பொறித்து இனவிருத்தி செய்கிறது. என மத்திய கடல் மீன் ஆராய்ச்சி கழகம் கூறுகிறது.

மேலும் கடல் அட்டையில் வெள்ளை,சிகப்பு ,கருப்பு என மூன்று வகைகள் உண்டு இவை சிறந்த சத்தான உணவாகும் மருத்துவ குணம் உடையது.போதை தன்மை கிடையாது ஆகவே மத்திய அரசு ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 40 ஆயிரம் மீனவர்களின் வாழ்வாதரத்தை கருத்தில் கொண்டு கடல் அட்டையின் தடையை நீக்க வேண்டும் இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதே போல் மாநில அரசுக்கும் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.




இது குறித்து சிறுதொழில் மீனவர் சங்க செயலாளர் அட்டப்பா என்ற நல்ல இப்ராகிம் கூறுகையில்,


உலகில் 86 நாடுகள் கடல் அட்டையை ஏற்றுமதி செய்து பலகோடி ரூபாய் லாபம் ஈட்டுகிறது.ஆனால் இந்தியா மட்டும் இந்த லாபத்தை இழந்து வருகிறது.மேலும் சட்டமன்ற தேர்தலின் போது கடல் அட்டைக்கான தடையை நீக்குவேன் என்று ஜவாஹிருல்லா.எம்.எல்.ஏ வாக்குறுதி அளித்திருந்தார்.எனவே இது குறித்து அவர் உடனடியாக கவனித்து முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.