கீழக்கரை நகர் நல இயக்கம் சார்பில் சுகாதார விழிப்புணர்வு கருத்தரங்கம் ஹீசைனியா மஹாலில் நடைபெற்றது.
இக்கருத்தரங்கிற்கு இயக்கத்தின் தலைவர் செய்யது இபுராகிம் தலைமை வகித்தார்.நிர்வாக இயக்குநர் ஹமீது அப்துல் காதர்,துணை தலைவர் சித்தீக்,செயலாளர் பசீர் அகமது,கொளரவ ஆலோசகர் ரிபாய்தீன்,செயல் தலைவர் பாரதி, நகராட்சி துணை தலைவர் ஹாஜா முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நகரில் உள்ள பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முன்னாள் மதுரை மாநகராட்சி ஆணையாளர்(திடக்கழிவு மேலாண்மை) நடராஜன் ஐ.ஏ.எஸ் கலந்து கொண்டு பொது மக்களின் சந்தேகங்களுக்கு பதிலளித்தார்.
இதில் மஹ்தூமியா தொடக்கப்பள்ளி ஆசிரியை ஆனந்தி பேசுகையில் , கீழக்கரையில் மலேரியாவால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.சுமார் 2 வருடங்களுக்கு முன் கீழக்கரையில் உள்ள பெரும்பாலான வீடுகளில் உள்ள கிணறுகளில் அரசு நிர்வாகம் கம்போசியா எனும் மீன்களை விட்டனர்.இதன் மூலம் தண்ணீர் ஓரளவுக்கு சுத்தப்படுத்தப்பட்டது.மலேரியாவும் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்தது.
தற்போது பெரும்பாலான கிணறுகளில் அந்த மீன்கள் அழிந்து விட்டது.இதனால் ஊரில் மலேரியா தலைதூக்க துவங்கியுள்ளது எனவே மீண்டும் அதே முறையை கையாண்டு மீன்களை கிணறுகளில் விட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
மேலும் விழிப்புணர்வுக்காக நடத்தப்பட்ட இக்கருத்தரங்கில் சுகாதாரம் தொடர்பாக பலரும் பல் வேறு கருத்துக்கள் தெரிவித்தனர்
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.