Monday, July 16, 2012

பள்ளி விழாவில் கீழக்கரையின் முதல் சப் இன்ஸ்பெக்டர் கொடியேற்றி பேசினார்!


கீழக்கரையிலிருந்து முதல் முறையாக காவல் துறையில் சப் இன்ஸ்பெக்டர் பொறுப்புக்கு தேர்வு பெற்று கோவை காவல்துறை (ஆயுதபடை) உதவி ஆய்வாளராக பணியாற்றும் முகமது அன்ஸ் இஸ்லாமியா பள்ளிகளில் நடைபெற்ற ஆண்டு விழாவில் பங்கேற்று தேசியக்கொடியை ஏற்றிவைத்து பேசினார்

விழாவில் பேசிய அனஸ் - இது தான் எனது முதல் மேடை பேச்சு என்றும்,வாய்ப்பளித்த‌ பள்ளி நிர்வாகத்துக்கு குறிப்பாக தாளாளர் முகைதீன் இப்ராகிம அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.


இது குறித்து இஸ்லாமியா பள்ளிகளின் தாளாளர் எம்.எம்.கே முகைதீன் இப்ராகிம் கூறியதாவது,

இவரை போன்ற இளைஞர்களை பாராட்டுக்குறியவர்கள்.கீழக்கரையிலிருந்து முதல் இளைஞராக சப் இன்ஸ்பெக்டர் பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டு நமது ஊரிலிருந்து அரசு பணிக்கு தயாராகும் இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார். அந்த அடிப்படையில் சப் இன்ஸ்பெக்டர் அனசை எங்களின் பள்ளி விழாவில் கொடியேற்ற அழைப்பு விடுக்கப்ப‌ட்டு அவரும் மகிழ்வோடு கலந்து கொண்டு சிறபித்தார்.இன்னும் நமதூரை சேர்ந்த‌ ஏராளாமான இளைஞர்கள் அரசு பணிகளில் இடம் பெற்று நாட்டுக்கும் வீட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.