Monday, July 16, 2012

கீழக்கரை நகராட்சியை கண்டித்து எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம் !



கீழக்கரையில் நகராட்சி நிர்வாகத்தின் மக்கள் விரோத போக்கு மற்றும் கீழக்கரையில் நிலவும் சுகாதார சீர்கேடு ஆகியவற்றுக்கு கண்டனம் தெரிவிப்பதாக‌ எஸ்டிபிஐ கீழக்கரை நகர் கிளை சார்பாக அறிவிக்கப்பட்டு இன்று காலை கீழக்கரை புதிய பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


எஸ்டிபிஐ நிர்வாகிகள் அப்துல் ஹமீது, செய்யது அபுதாகிர், அப்துல் ஹாதி அப்பாஸ் ஆலிம்,ஜஹாங்கிர் அரூஸி மற்றும் சமூக ஆர்வலர்கள் உஸ்மான்,முஜீப் சேட் கண்மணி சீனி ,கவுன்சிலர்கள் இடிமின்னல் ஹாஜா,ஜெயபிராகாஷ்,முகைதீன் இப்ராகிம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.