Friday, July 20, 2012

அமெரிக்க படையின் துப்பாக்கி சூட்டில் பலியான சேகர் குடும்பத்திற்கு எஸ்டிபிஐ ஆறுதல்!


துபாயில் அமெரிக்க கடற்படையால் சுடப்பட்டு இறந்த ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே திருப்புல்லாணி தோப்புலவலசையைச் சேர்ந்த மீனவர் சேகரின் குடும்பத்திற்கு சோஷியல் டெமாக்கரடிக் கட்சி (எஸ்டிபிஐ) சார்பில் மாநில பொதுச்செயலாளர் அப்துல்ஹமீது ஆறுதல் கூறினர். அவருடன் மாவட்ட தலைவர் நூர்ஜியாவுதீன், துணைத் தலைவர் அப்துல்வஹாப், பொதுச்செயலாளர் இஸ்ஹாக், பொருளாளர் சோமு, அமைப்பாளர் கார்மேகம் ,அப்பாஸ் ஆலிம் உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின் மாநில பொதுச்செயலாளர் அப்துல்ஹமீது கூறுகையில், ‘அப்பாவி மீனவரை சுட்டுக் கொன்ற அமெரிக்க கடற்படையை வன்மையாக கண்டிக்கிறோம். சேகரின் உடலை துரிதமாக இந்தியா கொண்டு வந்து அவரது குடும்பத்திடம் ஒப்படைக்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும்.என்றார்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.