
நகராட்சி கமிஷனர்(பொறுப்பு) முஜிபுர் ரஹ்மான்
பைல்(பழைய) படம்
கீழக்கரையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நகராட்சி கமிஷனர்(பொறுப்பு) முஜிபுர் ரஹ்மான் தலைமையில் நேற்று கீழக்கரையில் சோதனை நடத்தப்பட்டது.
முஸ்லிம் பஜார், வள்ளல் சீதக்காதி சாலை,இந்து பஜார், மீன் மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள கடைகளில் 28 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்ததோடு தொடர்ந்து விற்பனை கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர்கள் மனோகரன்,முருகன், அலுவலர் கார்த்திக் உடன் சென்றனர்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.